1
விடிந்தால் அவளுக்குக் கல்யாணம்.
விடியக்கூடாது என்று நினைத்தாள். அடைபட்ட சிறைக்கூடம் மாதிரி அவள் தன் தோழிகளால் முற்றுகையிடப்பட்டு, அறைக்குள் கிடந்த கவர்ச்சிமிக்க நாற்காலியில் உட்கார்ந்து, எதிரே சுவரில் தொங்கிய கடிகாரத்தின் ஓட்டத்தையே நிமிடத்திற்கொரு முறை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது மணி பதினொன்று. இன்னும் எட்டுமணி நேரத்தில் – அதாவது காலையில் ஏழு மணிக்கு – அவளின் திருமணம் நடக்கவிருந்தது. காலையில் ஆறுமணிக்கெல்லாம் கங்கல்முங்கலாக விடிந்துவிடும். அப்போது மனித நடமாட்டம் அங்கும் இங்கும் உலாவத் தொடங்கியிருக்கும். அந்த நேரத்தில் சஞ்சீவி இங்கு வந்து ஒன்றும் நடந்துவிடாது. அதற்கு முன்பாகவே – குறைந்தபட்சம் நான்கு மணிக்குள்ளே – அவன் வந்தாக வேண்டும். அவனும் நான்கு மணிக்குள்ளாக வந்துவிடுகிறேன் என்றுதான் அவளிடம் உறுதியாய் சொல்லியிருக்கிறான். சனங்களின் நடமாட்டம் அப்போது அரசல்புரசலாகத்தான் இருக்கும் என்பதால், எப்படியாவது அவர்களின் கண்களிலிருந்து தப்பி ஓடிவிடலாம் என்பது அவளின் தீர்மானமாக இருந்தது. அவனுடைய தீர்மானமும் அதுதான். அவர்கள் இருவரும் அந்த ஊரைவிட்டு வெளியேறிய பிறகு பொழுது விடிந்தால் போதும் என்று நினைத்தாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then