என்னுடைய சேகரிப்பில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை இந்தியா, பாகிஸ்தான் போர்ச் சூழலில் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். முடிவில்லாமல் நடந்து வரும் இரஷ்ய உக்ரைன் போரில் சேதமடைந்த கிரிமியா பாலத்தின் புகைப்படமும், இறந்துபோன ஒரு திமிங்கலத்தின் உடல் மீது நின்ற வண்ணம் ஒரு பனிக்கரடி அதன் மீதங்களைத் தின்னும் மற்றொரு புகைப்படமும்.
முதல் நவீன போராகக் குறிப்பிடப்படுவது அமெரிக்க உள்நாட்டுப் போர். புகைப்படக் கருவியால், போர்க்களக் காட்சிகள் ஆவணப்படுத்தப்பட்ட முதல் போர் அதுவே. அலெக்ஸாண்டர் கார்ட்னர் (Alexander Gardner) எனும் புகைப்படக் கலைஞரின் புகைப்படங்களை இணையத்தில் காண்க. அவரது புகைப்படங்களில் போரின் அவலத்தை மிக நெருக்கமாகக் காட்டக்கூடிய புகைப்படமாக நான் கருதுவது, ‘The Home of The Rebel Sharpshooter’. கற்களின் மீது சார்த்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய ரைபிள் எத்தனை தனிமையான, வீணான ஒரு மரணத்தின் முன், விழிப்போடு, ஒரு வளர்ப்பு நாயைப் போலக் காத்திருப்பதைக் காணலாம். அடுத்த மனிதன் அந்த ரைபிளை சுமப்பான், சுடுவான். ஆனால், அதைப் போன்ற முடிவை எட்டாமல் பிழைத்திருந்தால் அவனது வாழ்நாளில் அத்துப்பாக்கி ஒரு வெற்றிச் சின்னமாக மாறும். போர் வெற்றிக்குக் காரணமானதாக அல்ல, அவனது உயிரைக் காத்த துணைவனாக. ஒரு போரின் முடிவில் ஆயுதங்களுக்கும், அதில் ஈடுபட்ட மனிதர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியில் ஆயுதங்கள் ஓய்வெடுக்க, மனிதர்கள் போரின் சுமையைத் தொடர்ந்து சுமப்பார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then