9
மனித இனத்தின் வரலாற்றுப் பாதை நெடுகிலும் பல சிந்தனைப் பள்ளிகள் உருவாகி, வாழ்வினை ஒரு திசையிலிருந்து வேறொரு திசைக்கு மாற்றிக்கொண்டே இருக்கின்றன. படைப்புக் கோட்பாடுகள் அப்படித்தான் வேறுவேறானதாக இருக்கிறது. எல்லா மதங்களுக்கும் அதனதன் கடவுளர்தான் உலகம், அதில் வாழக்கூடிய உயிர்கள் என எல்லாவற்றையும் படைத்தார் என்று கூறுகின்றன. படைப்பின் வழிமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், படைக்கப்பட்டவை எல்லாம் கடவுள் என்னும் மூலத்தால்தான் என்று நம்பிக்கை இன்றுவரை உண்டு. ஆனால், உலகின் தோற்றம் குறித்து அறிவியலின் கருத்து வேறாக அமைந்தது. உயிர்களின் அமைப்புகள், கோள்களின் நிலவரங்கள் என எல்லாவற்றையும் ஆய்வுக்குட்படுத்திய அறிவியல் அறிஞர்கள் கடவுளால் உலகம் படைக்கப்படவில்லை என்றே கூறினர். நம் காலத்தில் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வரை அதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.
எல்லா மதங்களிலும் இருக்கிற இன்னொரு முக்கியமான கருதுகோள் ஆன்மா. ஆன்மா என்பது நம் உடலுறுப்பு அல்ல. அது நான் என்னும் சுயம் என்றும், அதைக் கடவுள்தான் அருளுகிறார் என்றும், அந்த ஆன்மாவை ஈடேற்றமடையச் செய்வதே மனித வாழ்வின் தலையாய குறிக்கோள் என்றும் சில மதங்கள் வற்புறுத்துகின்றன. ஆத்மா பரமாத்மாவிடம் சரணடைவதுதான் மனித வாழ்க்கை. நல்ல ஆத்மா நியாயத் தீர்ப்பிற்கு உட்படுத்தப்படும்போது சொர்க்கத்திற்கும் தீய ஆத்மா நரகத்திற்கும் செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை. தமிழ் இலக்கியத்தில் சொர்க்கம், நரகம் பற்றிய கதையாடல் ஒன்று உண்டு: “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்”. கண்டவர்கள் யாரும் நான் அதைப் பார்த்தேன், அது இப்படி இருந்தது என்று வந்து சொல்லவில்லை. அது இப்படி இருக்கும் என்று விரிவாகச் சொன்னவர்கள் யாரும் பார்த்துவிட்டு வந்து சொல்லவில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then