“ஞானி”
நம் சமூகம், இங்குப் பலரை பற்பல காரணங்களுக்காக ‘ஞானி’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நாம் திரைப்பட அல்லது பொழுதுபோக்கு கலைஞர்களை ‘ஞானி’ என்று கூறுவதில்லை. ஞானம் என்பது ‘அறிவு’ என்ற பொருள் கொண்டிருந்தாலும், நாம் அதனை அறிவியல், தத்துவம், ஆன்மீகம், சித்தாந்தம் என்ற அடிப்படையில் அணுகியே பழக்கப்பட்டுவிட்டோம். அவ்வாறான சூழலில் இசை என்றவோர் அடிப்படைக் கலாச்சாரக் கூறு, வெறும் கலை / பொழுதுபோக்கு என்றான நிலையில் அதனுள் குவிந்துகிடக்கும் கணிதத்தையும் அறிவியலையும் நாம் உற்றுநோக்காமல் கடந்துவிட்டோம். இசையை இயற்பியல் பார்வையில் அணுகினால், ஒவ்வோர் இசைக்கருவிக்கும் ஒரு Resonance (அதிர்வு) உண்டு, அதிர்வென்று ஒன்று இருந்தால் ‘அதிர்வெண்’ (Frequency) என்பது நிதர்சனம். கணிதத்தின் வாயிலாக இசையை நோக்கினால், தாளம், நடை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஒவ்வோர் அதிர்வெண்ணையும் வகைப்படுத்தி ‘Notes’ என்று மேற்கத்திய இசையிலும், ‘ஸ்வரம்’ என்று கர்நாடக இசையிலும், மேலும் பற்பல பெயர்களில் பற்பல இசைக் கலாச்சாரங்களிலும் சொல்வதுண்டு. சில இசைக் கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து பரிணமித்து இன்று பெரும் இசை இலக்கணங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவ்வாறான இசையைக் கற்கும், கற்பிக்கும் மக்கள் பெரும்பாலும் அந்த இலக்கணத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்வர். அவர்களுள் சிலர் இரண்டிற்கும் மேற்பட்ட இலக்கணங்களைக் கலந்தோ, இலக்கணத்தை உடைத்தோ இசையில் புதுமை செய்ய முயல்வர். இவர்களை நாம் ‘இசை மேதைகள்’ எனலாம். ஆனால், முன்பு நான் கூறியதுபோல இந்த இலக்கணங்களை அதற்கு வெளியே இருந்து பார்ப்பவர்கள் மட்டுமே அதன் அடிப்படை சாராம்சத்தையே உணர முடியும். உதாரணத்திற்கு, இசையை வெறும் Notes என்று பாராமல் அதன் அதிர்வுகளை மனதார உணர்ந்து அமைக்கப்படும் இசை, இவ்விலக்கணங்கள் எதுவும் அறியாத பாமர மக்களை இயல்பாகவே சென்றடையும். இவ்வாறு இசையின் ஒவ்வோர் அணுவையும் இயல்பாகவே உணர்ந்து இசையமைப்பவர்களை இசை‘ஞானிகள்’ என்றுதானே அழைக்க வேண்டும்! ஆச்சரியம் என்னவென்றால் இவ்வுலகில் அவ்வாறான இசைஞானிகள் இல்லை, இசை‘ஞானி’ ஒருவர் மட்டுமே.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then