ஒப்பு / ஒப்பாரி பாடுவது தமிழர்களின் ஆதி மரபு. இறப்பு வீடுகளில் துக்கம் தாளாமல் இரத்த சொந்தங்களும் உற்றார் உறவுகளும் அழுவது இயற்கை. இந்நிலையிலிருந்து மாறுபட்டு, இதே ஒப்பாரியைக் கலையாகப் பாவித்து, கூலிக்கு ஒப்பாரி பாடும் வழக்கமும் தமிழர்களிடம் காணப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தென் தமிழகத்தில் ‘கூலிக்கு ஒப்பாரி’ பாடும் மரபு செழிப்போடு உள்ளது. குறிப்பாக, பெண்கள் மட்டுமே தனியாகவும் குழுவாகவும் பாடிவருகிறார்கள். இப்போக்கைப் போலவே சென்னையில் ‘மரண கானா’ என்ற பெயரில் ஆண்களும் பாடிவருகின்றனர். இந்த மரபுப் பின்னணியில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பாரி பாடிக்கொண்டிருப்பவர் உசிலம்பட்டி, எழுமலைக்கு அருகிலுள்ள சீலைநாயக்கம்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள். எழுபது வயதைக் கடந்துள்ள இவர், ஒப்பாரி பாடிக்கொண்டிருக்கும் கலைஞர்களுள் மிகவும் மூத்தவர். மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, போடி பள்ளத்தாக்கைக் கடந்து கேரளத்தின் எல்லைவரைப் பரவியிருக்கிறது இவரது புகழ்.
‘ஒப்பாரி’ பேச்சியம்மாவை அவரது வீட்டில் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then