மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா” என எழுதி, “அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதை இச்சமூகம் பெரிதாகக் கொண்டாடவில்லை” என்றும் குற்றம் சுமத்தியது. அக்குற்றச்சாட்டை மறுக்க இயலாதுதான். ஆனால், அச்செய்தியை அந்த இதழ் ஒரு மூலையில் சிறிய கட்டத்தில் பதிவு செய்தது! எக்குற்றத்தை இச்சமூகத்தின் மீது அந்த இதழ் சுமத்தியதோ, அது அவ்விதழுக்கும் பொருந்தும். ஏனென்றால், சிம்பொனி இசைத்த முதல் இந்தியரான இசைஞானியைக் குறித்து விரிவான செய்தி வெளியிடவில்லை என என் கிராமத்து நண்பர்களிடம் எடுத்துக் கூறினேன். திரைப்படத் துறையினர் தும்முவதைக் கூட பேசுபொருளாக்கும் ஊடகங்கள், இளையராஜா ஒரு பெரும் சாதனை நிகழ்த்தியதைக் கொண்டாடாததற்கும், விவாதப் பொருளாக மாற்றாததற்கும் அப்பட்டமான ஜாதிய உளவியலைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க இயலும்? இருப்பினும், ஒரு மூலையில் வெளியிடப்பட்ட செய்திதான் எனக்கு முதன்முறையாகச் சிம்பொனி இசையை அறிமுகம் செய்தது. அதற்காகவாது அப்பத்திரிகைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இசையின் மீதும் இளையராஜாவின் மீதும் எனக்கு இருந்த ஈர்ப்பினால்தான் அந்தச் செய்தியை வாசித்தேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then