மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

த்த மேட்டு வழக்காறுகளைப் பார்க்கும்போது நந்த மன்னன் மாண்ட கதை பரவி, நாளடைவில் கதையிலுள்ள அவன் பெயரும் மருவி மறைந்தும்விட்டாலும் கதை மட்டும் நிலைபெற்று அழிவு எங்கெல்லாம் நடக்கிறதோ அதற்கான குறியீடுபோல் நத்த மேடு ஆகியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவன் ஆண்ட கதையே மாண்ட கதையின் வாயிலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. எனவே, மக்களின் நினைவுகளில் மாண்டுபோதல் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இவற்றில் வரலாறு – புராணம் – நினைவுகள் எனப் பலவும் முயங்கிக் கிடக்கின்றன. அதன் காரணமாகத்தான் நந்தன் மன்னனின் கதையே கூட எச்சமாகக் கிடைக்கிறது.

பழியும் சாபமும்

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் கண்ணகியும் சிலப்பதிகாரமும் பெற்றிருக்கும் இடம் சிறப்பானது. கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி மதுரையை அழித்ததும் அந்தக் கதையின் இறவா தன்மைக்குக் காரணமாகியிருக்கிறது. கண்ணகியின் இழப்பு சிலப்பதிகாரம் பிரதியாவதற்கு முன்பே மக்களின் நினைவுகள் இருந்திருக்கின்றன என்பதைச் சங்கப் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் மூலம் (ஒருமுலை இழந்த திருமாவுண்ணி, பேகன் மனைவி கண்ணகி, ஆட்டனத்தி ஆதிமந்தி) அறிந்துகொள்கிறோம். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட பின்னாலும் வழக்காற்றில் கண்ணகி கதையின் வெவ்வேறு வடிவங்கள் தமிழகத்திலும் கேரளத்திலும் நிலவியிருந்தன. அவையும் பின்னர் பிரதிகளாயின. சிலப்பதிகாரப் பிரதியின்படி கதையின் மையம் கோவலன் கொலைதான். கண்ணகி பாத்திரம் மறுஎழுச்சி அடைவதற்கு அச்சம்பவமே காரணமாகிறது. அது சாதாரண கொலை அல்ல. பொய்யான பழியினால் நடந்தது என்பதால்தான் முக்கியத்துவம் அடைந்தது. அவள் சபித்ததனால் மன்னரும் அவர் மனைவியும் இறக்கின்றனர். பரிவாரங்களும் அழிகின்றன. அரண்மனை இடிகிறது. மதுரை எரிகிறது. மக்கள் அலறுகின்றனர். மதுரையைக் காக்கும் மதுரை மாதெய்வமே கீழிறங்கி வந்து கண்ணகியிடம் கெஞ்சும் அளவுக்கு அவளின் கோபமும் சாபமும் செயல்படுகிறது. பிறகு அவள் கணவனை அடைகிறாள் அல்லது இறக்கிறாள். இதனால் சேரன் செங்குட்டுவன் மூலம் அவள் கோட்டம் பெறுகிறாள் அல்லது கோட்டை பெறுகிறாள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger