ஒளிப்படக் கலைஞர் என்பவர் சொந்த விருப்பம் உள்ளவர். அவர் தன் விருப்பப்படி, எப்போது வேண்டுமானாலும், நடந்துகொள்பவர். படைப்பாற்றல் மிக்க கலைஞர், தன்னைப் பற்றி உலகம் என்ன நினைக்கும் என்று எண்ணாமல், தன்னை வெளிப்படுத்துபவர். தான் சரியானவனா அல்லது அளவையியல் முறைப்படி நடப்பவனா என்பதைச் சரிபார்க்க அவர் ஒருபோதும் முயற்சிப்பதில்லை. ஒளிப்படக் கலைஞரிடம் கவனிக்கப்பட வேண்டிய செய்தி, அவர் எப்போதும் பயணத்தில் இருக்கிறார் என்பதுதான். இந்தக் கட்டுரை ஜெர்மன், ஸ்வீடிஷ், சுவிஸ் நாட்டு ஒளிப்படக் கலைஞர்கள் எடுத்த மதராஸ் நகர ஒளிப்படங்களும், தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புற ஒளிப்படங்களும் (1852 – 1858) பற்றி ஆய்வு செய்கிறது.
பிரடெரிக் பீபிக்கும் அவரின் ஒளிப்படங்களும்: மதராஸ் நகரின் வரலாற்றுக் காட்சிகள், 1852
1844இல் கல்கத்தாவில் வசித்துவந்த பிரடெரிக் பீபிக் என்ற ஜெர்மானியர், கல் அச்சுக் கலையும், ஒளிப்படக் கலையும் தெரிந்தவராவார். தாளில் கலோ வகை (ஒளிப்படங்களை அச்சிடுவதில் வெள்ளி அயோடைடு, ஓர் ஒளிச்சேர்க்கை உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துதல்) என்ற நுட்பமான ஒளிப்பட அச்சு நுட்பத்தைக் கற்றுக்கொண்டவர். அவர் கல்கத்தாவின் நிலப்பரப்பு பற்றிய படங்கள் பலவற்றை எடுத்தார். 1846இல் சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள பரந்துபட்ட காட்சிகளை வரைந்தார். அவற்றை இப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. பயிற்சி பெற்ற கல் அச்சு வல்லுநரான பீபிக், கலோ வகை ஒளிப்படக் கலைக்குத் திரும்பி 1847ஆம் ஆண்டு கல்கத்தாவில் பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுகளை மேற்கொண்டார். வங்காள, ஆக்ரா பெயரடைவிலும், 1849 – 1850 ஆண்டுப் பதிவேட்டிலும் அவர் பியானோ ஆசிரியராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.1
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then