தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 2000 தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக ‘மாநகர அலுவலகம் குடியேறும் போராட்டம்’ நடத்தியது இந்த நாடறியும். 1913 முதல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டு இன்றுவரை இப்படியொரு முற்றுகைப் போராட்டத்தை ரிப்பன் மாளிகை கண்டதில்லை. முன்னதாக இதே கோரிக்கைக்காக ஆறு தூய்மைப் பணியாளர்கள் (பெண்கள்) உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தி, அதற்கு அரசு செவிசாய்க்காமல் போனதால், அதன் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு மாநகராட்சியால் தள்ளப்பட்டனர். ஆரம்பம் முதலே இந்தப் போராட்டத்தையும் போராளிகளின் கோரிக்கையையும் கவனித்துவருகிறேன். இந்தப் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய தலைமையாக மூத்த தொழிற்சங்கவாதி தோழர் எஸ்.குமாரசாமி, தோழர் கு.பாரதி ஆகியோர் இருந்துவருகின்றனர்.
இப் போராட்டமானது எல்.டி.யூ.சி, உழைப்போர் உரிமை இயக்கம், ஏ.ஐ.சி.சி.டி.யு ஆகிய தொழிற்சங்கங்களின் தனிப்பட்ட போராட்டம் அன்று. நவதாராளவாத கொள்கையினால் உருவாகியுள்ள ஒப்பந்த ஊழியம் எனும் நவீன அடிமை சாசனத்திற்கு எதிரான போராட்டம். நகர மேம்பாட்டிற்காக மாநகராட்சிகளுக்கு உலக வங்கி கடன் வழங்கும்போது அது அந்த நகரங்களின் நன்மைக்காக வழங்கப்படுகிறது என்ற ஒரு பொதுப் பார்வை உண்டு. அதை அரசுகளும் விளம்பரம் செய்வதை நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனால், நகரங்களின் செயற்பாட்டையும் கட்டுமானத்தையும் தன் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் உலக வங்கி வழங்கும் இந்த கடன்களின் நோக்கம். தற்போது சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த மாஸ்டர் பிளான்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் விளக்கமென்பது, உள்கட்டமைப்பு, நிலையான பொருளாதார வளர்ச்சி என்பதாகும். சமீபத்தில் வெளியான மூன்றாவது மாஸ்டர் பிளான், தொழிலாளர் முறையையும் (Labour Pattern) சேர்த்து விவாதிக்கிறது. பொதுவாக, மாஸ்டர் பிளான் என்பது நகரத்தில் சாலைகள் எப்படி இருக்க வேண்டும், பாலங்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும், குடியிருப்புகள் எங்கு இருக்க வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிப்பதாகும். தொழிலாளர்கள் பற்றி உலக வங்கி விவாதிக்க வேண்டிய தேவை என்ன? அதாவது, உங்களைப் பணி நிரந்தரமற்ற நிலையில் வைத்திருப்பதுதான் அவர்களின் குறிக்கோள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then