வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதான அலட்சியமும் நடவடிக்கையும்

தே.அசோக் குமார்

சாதியின் பெயரால் வன்கொடுமைகள் எந்த வகையிலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான அரசியல் சூழ்நிலையால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அந்தச் சட்டம் அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகவும் கருதி அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 2015ஆம் வருடம் இந்தச் சட்டம் பல சிறப்புக் கூறுகளைக் கொண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஏராளமான சிறப்புப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு மீண்டும் வலுவூட்டப்பட்டது.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுக்கப்பட்டால் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படாமல் முதல்நிலை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், கைது செய்ய முன் அனுமதி பெற வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல போராட்டங்கள் நடத்தப்பட்டு, நாடாளுமன்றம் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் தலைநகரத்தில் பல தலித் கட்சிகள், இயக்கங்கள் சேர்ந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்தி, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பின்னர், வேறு வழியின்றி 2018ஆம் ஆண்டு 18A என்னும் புதிய பிரிவைச் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger