காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...
இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
நாமேன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடியாயிருக்கோம் அதுவா ஒரு ஊருக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும் மகனே. வெத்து மயிருகள் மூடப்பட்ட சலூனில் வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும் மாநாடு...
ஜூலி சிந்தனை தப்பியபடி சாலையோரம் விழுந்துகிடக்கும்போதெல்லாம் சற்று ஈரம் படிந்த சொரசொரப்பான நாக்கில் என் தாடையை நனைத்துக்கொண்டிருப்பாள் ஜூலி. எதையும் யோசிக்க விடாத பசி மயக்கம் யாரோ...
பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...