பௌத்தம்: பெரியாரும் அம்பேத்கரும் – கச்சாமி

‘அம்பேத்கர் ஏன் பௌத்தத்தைத் தழுவினார்’ என்னும் முதல் கட்டுரையில் அம்பேத்கரின் நவயானா பௌத்தத்தையும் மார்க்சியத்தையும், இரண்டாம் கட்டுரையில் அயோத்திதாசர் – அம்பேத்கர் கட்டியெழுப்பிய பௌத்தம் பற்றியும் விரிவாக ஒப்பிட்டு ஆய்வுசெய்துவிட்டதால், இங்கு தமிழ்ச் சூழலில் அனைத்துத் தளங்களிலும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் மற்றச் சிந்தனை மரபுகளோடும் அதைப் பொருத்திப் பார்க்கும் தேவை இயல்பாகவே எழுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபாகும்.

தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத தனித்துவச் சிந்தனை மரபாக உருவான பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபு நூற்றாண்டுக் கடந்தும் தமிழ்ச் சூழலில் மிகத் தீவிரமாக இயங்கிவருகிறது. வைதீக மரபு எதிர்ப்புச் சிந்தனைகள் இந்தியத் தத்துவச் சிந்தனை மரபின் வரலாற்றில் தொடக்கம் முதல் மிக முக்கியமான பாத்திரத்தை ஆற்றிவந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நவீனக் காலத்தில் வட்டார அளவில் உண்டான பல்வேறு அரசியல் சிந்தனைகளில் தமிழகத்துக்கே உரிய போர்க்குணத்தோடு வைதீக மரபின் மூடச் சிந்தனைகளை அடித்து நொறுக்கி, எதிர்த்து மேலெழுந்தது பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபாகும். சித்தர்கள், வள்ளலார், அயோத்திதாசர் முதலானோர் முன்னெடுத்துவந்த தமிழகத்தின் தனித்துவமான, வீரியமான, வரலாற்றுப் பாரம்பரியமிக்க இந்தக் கலக மரபை – சாதி, வர்ணம், மதம், வேதம், சாஸ்திரங்கள், சடங்குகள், புராணங்கள், கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகள், மேலாதிக்கம், சுரண்டல் முதலான எல்லாவற்றையும் எந்தச் சமரசமுமின்றி எதிர்க்கும் கலக மரபை – நவீனத் தமிழ்ச் சூழலில் பரந்துபட்ட அளவில் குறிப்பாக, வெகுமக்கள் மத்தியிலும் நிலைகொள்ள வைத்த பெருமை பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபுக்கு உண்டு. இன்றுவரையிலும் அது தொடர்கிறது. அத்தகைய வீரியத்துடன் எழுச்சி பெற்ற, இன்றும் உயிர்ப்போடு தமிழ்ச் சிந்தனை மரபை ஆளுமை செய்கிற, பெரியாரிய – திராவிட இயக்கத்திற்கும் அம்பேத்கரின் நவயானா பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் இடையேயுள்ள கொள்கை உறவையும் கோட்பாட்டு விலகலையும் ஆராய்வது நம்முடைய இன்றியமையாத தேவையாகிறது.

சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்களான பெரியாரும் அம்பேத்கரும் பெரும்பாலும் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் இணக்கமான கொள்கை உறவோடு இருந்துவந்தனர் என உறுதியாகச் சொல்லலாம். இன்றைய நவீனத் தொலைதொடர்பு வசதிகள் அவ்வளவாக வளர்ச்சி பெற்றிடாத அக்காலத்தில் வெவ்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்தாலும், மிகச் சில முறை மட்டுமே நேரில் சந்தித்துக்கொண்டாலும் அவர்கள் இருவரின் சிந்தனை நோக்கும், போக்கும் பெரும்பாலும் ஒத்த அலைவரிசையில் பயணித்தன; எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் தீர்க்கமாக வெளிப்பட்டன. பெரியார், அம்பேத்கர் இருவரின் அடிப்படைச் சிந்தனைகளிலும் முன்மொழிந்த கொள்கைகள், கோட்பாடுகளிலும் பெருத்த வேறுபாடுகளைக் காண முடியாது. சமத்துவத்தை வென்றெடுக்க அயராது போராடுவதிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குச் சமூகநீதியை முன்நிபந்தனையாக வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதிலும் இருவரும் ஓர்மையோடும் உறுதியோடும் செயல்பட்டனர். இத்தனை இணக்கமான போக்குக்கு இடையிலும் அவர்கள் இருவருக்கிடையில் மாறுபட்ட சில கருத்துகளும் உண்டு.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!