“சமூக உயர்வு என்பது அரசியல் விடுதலையில் மட்டுமல்ல; சாதி ஒழிப்பில் மட்டுமல்ல; நிலத்தைக் கைப்பற்றுவதிலும்தான் இருக்கிறது. அந்தப் பார்வை நமக்கு இல்லை”
– எழுத்தாளர் யாக்கன் (தலித் முரசு, மார்ச் 2003)
“இந்தியாவில் 15 கோடியே 71 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலம் உள்ளது. அது 14 கோடியே 60 இலட்சம் பேருக்குச் சொந்தமாக இருக்கிறது. 2015 – 2016 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டிருக்கும் விவசாயப் புள்ளிவிவரப்படி மொத்தமுள்ள நிலத்தில் தலித்துகளுக்குச் சொந்தமாக 9% நிலம் மட்டும்தான் இருக்கிறது. ஆதிவாசிகளிடம் 11% நிலம் இருக்கிறது. மீதமுள்ள 80% நிலம் பிற சாதியினருக்குச் சொந்தமாக இருக்கிறது”
– எழுத்தாளர் துரை.ரவிக்குமார் (தலித்துகளும் நிலமும், ப.20)
இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனச் சொல்லிக்கொள்பவர்கள் மேற்கண்ட கூற்றுகளுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், பட்டியல் சமூக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஒருபொருட்டே இல்லை. பொதுவாக, எல்லோரும் நிலத்தை அவர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகவே கருதுகின்ற சூழலில், நாம் ஏன் நம்முடைய நிலத்தை நமது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகக் கருதக்கூடாது. இங்கு நிலம் நம்முடைய வாழ்வாதாரத்தையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கும் சூழலில் அதை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்திட முடியாது. அதுவும் நிலவுரிமைக்கான ஆவணங்கள் நம்மிடமிருந்தும் விட்டுக்கொடுப்பதென்பது நம்முடைய இயலாமையையே காட்டும். அதற்கு நாம் ஒருபோதும் காரணமாகிவிடக் கூடாது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then