தலித்துகளும் பொருளாதாரக் கொள்கையும் – முனைவர் அம்பேத்கரின் பங்களிப்பு

கெய்ல் ஓம்வெத்

முன்னுரை

பாபாசாகேப் என்று தலித் மக்களால் அழைக்கப்படுகின்ற பீமாராவ் அம்பேத்கர் பொருளாதாரத்தில் கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலில் தீவிரமாக இருந்த காலத்திலும் இது தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. அறிவாளிகளிடையே தற்பொழுதுள்ள குழப்பமான சு+ழ்நிலையில் தலித் சிந்தனையிலிருந்து மார்க்சியத்திற்கு இணையான ஒரு தத்துவத்தை நம்மால் பெற முடியுமா? என்ற சிந்தனையில் தோன்றியது இக்கட்டுரை.

அம்பேத்கரின் பொருளாதாரக் கோட்பாடு

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வாங்கிய பொழுதும் அம்பேத்கர் காரல் மார்க்சைவிட அரசியல் தளத்தில் அதிகம் செயல்பட்டவர். அதே வேளையில் அவருக்கு உயர் ஆராய்ச்சிக்கு உரிய நேரம் கிடைக்கவில்லை. தமது காலத்தில் இருந்த நெருக்கடியான சுழ்நிலையில் அவர் மூழ்கிவிட்டார். இதன் பிரதிபலிப்பை அவரது பொருளாதாரச் சிந்தனையிலும் காணலாம்.

1920கள் மற்றும் 1930கள்

முதலாவதாக அம்பேத்கரின் தொடக்ககால கல்வித்துறை சார்ந்த பொருளாதார கருத்து (Evolution of Provincial Finance & Problem of Rupee) ஆகிய இரண்டும் ஆங்கில பேராதிக்கத்திற்கு எதிராக சுதந்திரப் போக்கில் பழமைவாதப் பொருளாதார முறையில் அமைந்த ஆங்கில ஆட்சியை மதிப்பீடு செய்கிறது. இரண்டாவது கட்டமாக 1930களிலும் 1940களிலும் சமூக, தேசிய தளங்களில் முக்கிய பங்கு வகித்த மார்க்சிய கோட்பாட்டின் தாக்கமும் இருந்தது. அரசு பொதுவுடைமை என்பதிலும் அவர் பார்வை முக்கியத்துவம் பெற்றது. இக்காலகட்டத்தில் அம்பேத்கர் இரட்டை அமைப்பு முறையைப் யோசித்தார். இவ்வமைப்பு முறையில் பிராமணியமும் முதலாளித்துவமும் சமூக சுரண்டலுக்கான இணையான அமைப்பாகவே அவரால் கருதப்பட்டது. மூன்றாவது கட்டமாக அவரின் இறுதிக்காலத்தில் சாதி, இந்துமதம், பவுத்தம் பற்றிய வரலாற்று ரீதியான ஆய்வு அவரை பவுத்தத்தை ஒரு முழு மாற்றாக ஏற்கச் செய்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!