இடதுசாரி போராளிகளும் அரசுகளும்
சத்திஸ்கர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், அவர்களை இல்லாமல் செய்திட அவர்களைத் தாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாநில, ஒன்றிய அரசுகளின் வெவ்வேறு படையினருக்கும் இடையிலான ‘போர்’ உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 2024இல் 287 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பிலான செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்கள் போக, ஆதிக்குடிகள் பலர் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறிவருகின்றனர். 2025 மே மாதத்தில் ஒரே வாரத்தில் 31 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு தொடர்ந்து அவர்களின் தலைவர்களில் யாராவது ஒருவர் அல்லது பலர் கொல்லப்பட்ட செய்தி நாளிதழ்களில் இடம்பெற்றுவருகிறது.
இதற்கிடையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயார் என்றும் மாவோயிஸ்ட்டுகள் செய்திகளை விடுத்தனர். சிவில் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் மனித உரிமை அமைப்புகளும் அரசை நோக்கி இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சத்திஸ்கரைச் சேர்ந்த ஆதிக்குடியினரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும், அவற்றில் ஆதிக்குடிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்துள்ளனர். ஆனால், இக்கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள விரும்பாது தொடர்ந்து போராளிகளைக் குறியிட்டுத் தாக்கி, கொன்றுவருகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then