தலித் அல்லாதோர் இலக்கியம்: சாதிய ‘கரிசனையும்’ தலித்துகளும் – ஆர்.அபிலாஷ்

தலித்துகள் இலக்கியத்தில் நேரடியாகத் தம் உலகைச் சித்தரிக்க ஆரம்பித்துச் சில தசாப்தங்களுக்கு உள்ளாகத்தான் இருக்கும். ‘தீண்டத்தகாதோர்’ குறித்த கதையாடல்கள் தமிழில் பக்தி இலக்கியம் தொடங்கியே இருந்து வருகின்றன. ஆனால், தலித் இலக்கியத்தின் நோக்கம் தலித்துகளின் இருத்தலை, அரசியலை, தம்மைத் தலித்தாக்குகிற சமூகக் காரணிகளைப் பேசுவதும் விடுதலையை, சமத்துவத்தைக் கோருவதும் எனில் தலித் அல்லாதோருடைய தலித் சித்தரிப்புகளின் நோக்கம் மற்றொன்றாக இருக்கிறது. அது என்னவென விவாதிப்பதே இக்கட்டுரை.

அம்பேத்கர் தனது ‘சூத்திரர் என்பவர் எவர்?’ நூலில் கூறுவதைப் போல வர்ணம், சாதி ஆகிய கருத்தமைவுகளும் அவற்றின் மீது எழுந்துள்ள கட்டமைவுகளும் இயற்கையாக நம்மிடையே தோன்றியவை அல்ல. அவை வரலாற்றில் தோற்கடிக்கப்பட்ட, அதிகாரம் பிடுங்கப்பட்டு விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்ட மனிதர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காகவும் அவர்களைத் தொடர்ந்து சுரண்டுவதற்காகவும் பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை. மேலும், நேரடியாகச் சொல்வதானால் பூர்வ பௌத்தர்கள் மீது அத்வைதிகளுக்கும் வைதீகர்களுக்கும் உள்ள விரோதம், குரோதம், அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வைக்கிற விருப்பமுமே சாதி அமைப்பாகத் தோன்றி நிலைகொண்டிருக்கிறது. பக்தி இலக்கியக் காலம் துவங்கி நவீனக் காலம் வரை பல்வேறு சமூக அழுத்தங்கள் காரணமாகத் தலித்துகளை அமைதிப்படுத்தி, நான்கு வர்ணங்களுக்குள் அவர்களை நிலைப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகளை நம் வைதீகச் சமூகம் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக இலக்கியம் உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களில் சாதி ஒழிப்பு, சாதியைச் சாடுவதன் பெயரில் சாதியை முழுக்க அழிக்காமல் அதை அந்தந்தக் காலத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியாக மீளமைவு செய்யும் நோக்கில் கதையாடல்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

பாதியாய் அழுகிய கால்கையரேனும்
பழிகுலமும் இழிதொழிலும்
படைத்தோரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவர்
சாதியழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியாற் றக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப்பள்ளி
கொள்வான் பொன்னரங்கம் போற்றாதார்மேற்கண்ட பாடல் திருவரங்கக் கலம்பகத்தில் உள்ளது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!