இலக்கியம் என்பது இன்னிகழ்வை மட்டுமே பதிவிறக்கம் செய்தல் என்ற நிலையைத் தாண்டி மடைதிறந்த வெள்ளமாய் மாற்றத்திற்குள்ளாகும் காலம் இது. அந்த அடிப்படையில் அதிகார வர்க்கம் மையத்தில் கோலோச்சிருந்த வேளையில் மேற்கத்தியக் கோட்பாடுகள் சார்ந்த இலக்கியத் தாக்கங்களின், வரவுகளின் விளைவால் இந்தியச் சூழலிலும் இலக்கியத்தின் நகர்வைத் தவிர்க்க முடியவில்லை. எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்டல், கட்டுடைத்தல், மறுபரிசீலனை செய்தல் என்ற புதுவகைச் சிந்தனை மரபைப் பின்நவீனத்துவம் தோற்றுவித்தது. அதனையொட்டி எழுந்த இலக்கியங்களிலும் அவற்றின் பிரதிபலிப்புகள் இருந்தன. குறிப்பாக விளிம்புநிலை, தலித் இலக்கியங்களில் மேற்கூறியவை மிகுதியாகவே காணப்படுகின்றன. தலித் இலக்கியங்கள் பெரும்பாலும் தங்களின் இருப்பிற்கான அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்கிப் பதில் தேடும் முயற்சியில் இன்றளவும் ஈடுபடுகின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then