இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’ படத்தின் சிறப்புத் திரையிடல் திருவனந்தபுரம் கைரளி அரங்கில் முடிந்திருந்தது. நுழைவாயிலில் நின்றிருந்த அடூரை பார்வையாளர்கள் மொய்த்துப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கேள்வி: ‘இந்தப் படத்தில்தான் பாட்டே இல்லையே? இதற்கு ஏன் இளையராஜாவை இசையமைக்கச் செய்தீர்கள்?’.
நொடிப் பொழுது நிதானித்த அடூர் சொன்னார். ‘மூன்று காரணங்களுக்காக இளையராஜாவை இசையமைக்கக் கேட்டுக்கொண்டேன். முதல் காரணம்: நீங்கள் சொல்வதுபோல இளையராஜா வெறும் பாட்டுப் போடுகிற இசையமைப்பாளரல்ல. இந்தப் படத்தின் கதையோட்டம் தமிழ்நாட்டுப் பின்னணி கொண்டது. அதற்குத் தமிழ்த் தனமான இசை தேவை. அதைத் தரக் கூடிய ஒரே இசையமைப்பாளர் அவர்தான் என்பது இரண்டாவது காரணம். இளையராஜா சினிமா இசையமைப்பாளர் மட்டுமல்ல. ஒரு முழுமையான இசைஞர் என்பது மூன்றாவது காரணம்’.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





