இளையகாளி

வினையன்

மேய எம்மோம் எடங் கெடந்தாலும், இண்டு இடுக்குல பூந்துதான் மேயிவீங்க. கட்டுன ரெண்டாம் நாளே ஒடஞ்ச செவுத்து மேல ஏறி நிக்கிறியே… தவறி கீழ வுழுந்து காலு கீலு ஒடஞ்சா என்ன செய்யிறது. ஒன்னாட்டம்தான அதுவோளும், கும்பலா மேயிது பாரு. நீ ஏன் எப்ப பாத்தாலும் கால தூக்குறதயே பொழப்பா வச்சிருக்க. ஒருநாள் இல்ல ஒருநாள் ஒங் கால ஒடச்சி முழுங்கி பொலாச்சி வச்சி கட்றேன் இரு” எனப் புலம்பிக்கொண்டே வந்தான் காளி.

இவ்வளவு நிதியில் இவரால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் என்கிற பலகை தாங்கிய ஏரியின் தடுப்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்தன. எஞ்சிய சுவற்றின் மீதேறி, ஏரியின் தென்கோடி மூலையில் பலவாண்டுகளாய் நிற்கும் புளியமரத்தின் தாழ்ந்த கிளையின் நுனிக் கொழுந்தை, இரண்டு கால்களைத் தூக்கியும், இரண்டு கால்களை ஊன்றியும் லாவிப் பிடித்து மென்றுகொண்டிருந்தது ஒரு ஆடு. சற்றுத் தள்ளி ஆறுமுகக் கள்ளியின் ஒவ்வொரு முள் வரிசைக்கும் இடைப்பட்ட வெற்றிடத்தைச் சாமர்த்தியமாகக் கடித்துத் தின்றுகொண்டிருந்தன சில ஆடுகள். ஒரு கொரா குட்டி மட்டும், தாயாட்டின் பால் மடியைச் சுழன்று சுழன்று முட்டிக்கொண்டிருந்தது. எந்த இடரும் யாருக்கும் தராமல், இரை தேடுவதையே தன் முழுமூச்சாய் எண்ணிப் பரபரவென மேயும் இவ்வாடுகளின் மேய்ப்பன்தான் காளி என்கிற காளிதாஸ்.

வரும் வழியில் பறித்த ஆறுமுகக் கள்ளிப் பூவை

 

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger