“மனிதர்கள் விட்டுச் சென்ற இடத்தை இசை நிரப்புகிறது.”
காலை
கடல் போன்ற வீடு. கீழ்தளத்தில் மூன்று அறைகள், மேல்தளத்தில் நான்கு அறைகள்; எல்லா வசதிகளும் உள்ளன, ஆனால் வாழ்வது மீனாட்சி மட்டும். மற்ற அறைகள் திறக்கப்படாத நினைவுகள் போல அமைதியாகக் கிடக்கின்றன. காலையில் அவள் எழுவது அலாரம் சத்தத்தால் அல்ல, உடலில் எங்கோ இருந்து வரும் வலியால். மின்சார கெட்டிலில் தண்ணீர் கொதிக்கிறது; காபி தயாராகிறது; அதற்குள் ப்ளூடூத் ஸ்பீக்கரில் ‘ஏதோ நினைவுகள் கனவுகள்ஞ்’ ஒலிக்க ஆரம்பிக்கிறது. அதிகாலை குளிர் இன்னும் அறையைவிட்டுப் போகவில்லை. அவள் காபி கப்பை எடுக்கும்போது கையில் சிறிய நடுக்கம் தெரிகிறது. டேபிளின் மூலையில் இருக்கும் மாத்திரை, மருந்துப் பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒரு நேரத்தை நினைவூட்டுகின்றன; அவள் அவற்றை எடுத்துக் குடிக்கிறாள்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





