“இவ்வுலகம் வெறுமையின் ஊடேயே நகர்ந்து கொண்டிருக்கிறது”

- மிலன் குந்தேரா | தமிழில்: ராம் முரளி

நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலகப் பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டுத் தேர்வாகக் கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஓர் அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. 2014-ஆம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.

செக் குடியரசின் புரூனோ நகரில் 1929-இல் பிறந்தவர் என்றாலும் 1975-இல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்குப் பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துகளை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது என்றொரு வழக்கு புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

தமது படைப்புகளை பிரெஞ்சு இலக்கியத்தின் அங்கமாகவும் தம்மை ஒரு பிரான்ஸ் தேசத்து எழுத்தாளராகவுமே எப்போதும் வகைப்படுத்த வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். பொதுவாக, தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த தகவல்களை வெளியிடுவதை விரும்பாதவர். தனிக்கெனத் தனித்துவமான நாவல் எழுத்து பாணியை உருவாக்கி வைத்துள்ள மிலன் குந்தேரா, தமது படைப்புகளில் இருத்தலியல் குழப்பங்களையும் பாலியல் தூண்டுதலையும் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தனி மனிதக் கவனப்படுத்துதலையும் வரலாற்று மேடையில் செய்யப்படும் ஓர் அரங்கத்தைப்போல நிகழ்த்திச் செல்கிறார். அவரது நாவல் கலை பற்றிய கட்டுரையை முன்வைத்து, 1987-ஆம் வருடத்தில் கிரிஸ்டியன் சால்மோனால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தமிழாக்கமே இது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!