கடல்நீளத் தற்கொலை – ரமேஷ் பிரேதன்

நாவல் பகுதி

ரேமா என்னைப் பிரிந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. எந்த நாட்டில் எந்தக் கடலில் மிதக்கிறாளோ அறியேன். பெயர்தான் வெவ்வேறு, எல்லாக் கடலும் ஒன்றே எனச் சொல்லும் அவளை, இக்கடலைத் தீண்டுவதின் வழியே தொடுகிறேன். நீண்ட உரையாடல்களால் நிறைந்த என் வாழ்க்கையைப் போல அலுப்பானது வேறில்லை. என்னை இரண்டாகப் பிளந்து ஒன்றை எதிரில் நிறுத்தி உரையாடுவதிலுள்ள அயற்சி வேறெதிலுமில்லை. நான் ஆணும் பெண்ணும் கலந்தவன் அல்லன்; வெற்று ஆண் என்ற ஒற்றைப் பாலாலானவன். பெண்மை கலக்காத ஆண்மையில் கவித்துவம் அற்றுப்போகும். ஓராண்டு இந்நிலத்தில் தங்கியிருந்த ரேமா, தரிசாய்க்கிடந்த என்னை உழுது வேளாண்மை செய்தாள். ஒருத்தியின் மேலாண்மைக்கு என்னை ஒப்புக்கொடுத்திருந்தேன். பிளவுண்ட என்னை ஒருமை செய்து பதப்படுத்தினாள். மண்ணிலிருந்து கிளர்ந்து வெளிப்பட்ட கற்களும் பாறை உருண்டைகளும் விதைகளாகவும் கிழங்குகளாகவும் முளைத்தன. அதுவரை உப்புச் சுவையை மட்டுமே மேலதிகமாகச் சுவைத்திருந்த நான் உடம்பின் சுவையில் திளைத்தேன். அன்பு என்ற கருதுகோளைப் பொருண்மை செய்தால் உருத்திரியும் சமைவே அவளது உடம்பு. ஆம், அந்த உடம்பைப் பிசைந்து எனது குடிவழி குலச்சாமியைச் செய்தேன். தொடக்கமும் முடிவுமில்லாக் காலம் அந்த உடம்புக்குள் திணிந்திருந்தது.

அங்காளனின் துணைவி பச்சை மிளகாயைக் கிள்ளிப்போட்டு வடகம் தாளித்து வைக்கும் மீன் குழம்பிற்குக் கிழக்குக் கடலையே தன்னுடைமையாக்கி எழுதிக்கொடுக்கலாம் என்று அவளிடமே ரேமா சொன்னாள். தான் சமைக்கும் மீன் குழம்பை வெள்ளைக்காரி ஒருத்தி சுவைத்துச் சிலாகிப்பதை வெட்கம் கலந்த பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டாள். மாரியம்மாளைவிட ரேமா ஐந்தாண்டுகள் மூத்தவள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!