‘சுத்த சுயம்புவான சுரணையுணர்வு’ – கல்யாணராமன்

ம.மதிவண்ணனின் கவிதைகளை முன்வைத்து...

கவிஞர் ம.மதிவண்ணன் அவர்களை எனக்கு நெருக்கமாகத் தெரியாது. ஏழெட்டுத் தடவைகள் அலைபேசி வாயிலாக மட்டுமே அவரோடு பேசியிருக்கிறேன். ‘ஜானகிராமம்’ தொகுதிக்காக அவரிடமிருந்து கட்டுரை  கேட்டேன். ஆனால், கட்டுரை பெற மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. அவர் கட்டுரையைக் கொடுத்த பிறகு, நன்றி தெரிவித்து ஒருமுறை பேசினேன். அப்போதுதான் அவர் சொன்னார்: “இரண்டு மாதங்களாக நானும் என் மனைவியும் கொரோனாவால் அவதிப்பட்டோம். அதைச் சொல்லி உங்களையும் சேர்த்து அவதிக்குள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை. ஒப்புக்கொண்டபடி எப்படியாவது கட்டுரையை முடித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது” என்றார். எனக்குத்தான் சங்கடமாகப் போய்விட்டது. இவ்வளவு மென்மையானவரா மதிவண்ணன் என்று வியந்து நின்றேன். ஒரு மனத்தைக்கூடக் காயப்படுத்திவிடக்கூடாது என்கிற மிக மேன்மையான ஒரு மனிதர்தான் அவர். கொரோனாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றுகூடத் தெரியாமல், அவரிடம் கட்டுரை கேட்டுத் தொந்தரவுபடுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். “பரவாயில்லை சார். கொரோனா வேதனையை மறக்க தி.ஜானகிராமன் பயன்பட்டார்; அதற்காக உங்களுக்கு நன்றி” என்றார். எவ்வளவு உயர்ந்த பண்பாளர் எனக் கூசி நின்றேன். எதற்காக இந்தப் பீடிகை என்று நீங்கள் கேட்கலாம். சாதியச் சமூகத்தின் மீது கடுங்கோபம் கொண்டு கவிதைகளைப் போர் அம்புகளாய்ப் பொழியும் ஒருவர், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு அன்புள்ளம் கொண்டவராகச் சக மனிதர்களிடம் எத்தகைய நட்புணர்வு பாராட்டிப் பழகுகிறவராக உள்ளார் என்பதைப் பொதுவெளியில் முன்வைக்கத்தான், இந்த முன்குறிப்போடு தொடங்குகிறேன்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதிவிட முடிந்த ஒருவனால்கூடச் “சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமையான்” என்றுதான் சுற்றி வளைத்தெழுத முடிகிறது. மனிதர்களுக்கிடையே காணப்படும் வேறுபாட்டை, அவ்வளவு எளிதாக யாராலும் மறுத்தெழுதிவிட முடியவில்லை என்பது தான் நமது பேரவலம். காலத்திற்கு முந்தி வள்ளுவச் சேவலும் கூவிவிட முடியவில்லை என்பது குற்றமன்று; இப்படித்தான் மானுட வாழ்வு மெல்ல மெல்லச் சமத்துவம் நோக்கி ஊர்ந்து வர வேண்டியிருக்கிறது என்பதுதான் வரலாறு. இருபதாம் நூற்றாண்டில் ஒருவன் எழுதினான்: “சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்!” மேலும் அவனேதான், “வையகம் காப்பவரேனும், சிறுவாழைப் பழக்கடை வைப்பவரேனும், பொய்யகலத் தொழில் செய்தே, பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்” என்றுமெழுதியிருக்கிறான். இதுதான், மதிவண்ணனின் பார்வையும். ஆனால், ‘செய்தொழில் வேற்றுமைப் பட்டாலும், சிறப்பொவ்வும்!’ என்ற இந்த இடத்திற்குப் பல்வேறு தடைகளைத் தாண்டித்தான், மானுடச் சமூகம் எப்படியோ தப்பிவந்து சேர்ந்திருக்கிறது. இதை வலுப்படுத்திப் பின்தலைமுறையினருக்குக் கையளிக்கும் நோக்குடையவை ம.மதிவண்ணனின் கவிதைகள். இதுதான் இக்கவிஞரின் கவிதைகள் பற்றிய என் முதல் அவதானிப்பு.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!