மருத்துவ அமைப்பின் குரூரம் – சட்டநாதன்

டுக்கப்பட்ட மக்களின் குரலானது தமிழ் இலக்கியத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய ஆரம்பக் காலகட்டத்தைப் பேச முற்படும் எவரும் தவிர்க்க முடியாத பெயர் இமையம். சாதியின் கொடுங்கரங்கள் பற்றியிருக்கும் சமூக அமைப்பில் அதன் மூலாதாரக் கூறான குடும்ப அமைப்பைத் தன்னுடைய எழுத்தின் மையமாக்கியவர் அவர். குடும்ப அமைப்பின் பகுதியாக இருக்கும் ஒவ்வொருவரும் பிரக்ஞையின்றியும்கூட சாதியின் ஆட்டுவிப்புக்கு எப்படி இசைகிறார்கள் என்பதை மிகுந்த நுட்பத்துடனும் இலக்கியபூர்வமாகவும் வெளிப்படுத்தியவர். இவ்வகையில், இமையத்துக்குச் சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த ‘செல்லாத பணம்’ ஒரு மைல்கல் எனலாம். மருத்துவமனை இந்நாவலின் பிரதானக் களமாக இருந்தது இன்னொரு முக்கியமான அம்சமாகும். இந்தக் களம் அவருடைய சமீபத்திய நாவலில் (‘இப்போது உயிரோடிருக்கிறேன்’) இன்னும் விரிவாகத் துலக்கம் பெற்றிருக்கிறது. மருத்துவ அமைப்பின் குரூரப் பக்கங்கள் இந்த அளவுக்கு விரிவான தளத்தில் இன்னொரு தமிழ் நாவலில் வெளிப்பட்டதில்லை.

நடுத்தர வர்க்கக் குடும்பம். அப்பா மில் வைத்து நடத்துகிறார். பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்ளாத மனிதர். யார் முன்பும் கைகட்டி நிற்க விரும்பாத, எங்கேயும் காத்திருக்க மனமில்லாத, குடும்பத்தில் பாசத்தைக் காட்டத் தெரியாத, மனைவியின் பேச்சுக்கு செவிசாய்க்காத விட்டேத்தியான நபர். அம்மாவுக்கோ வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய ரத்த வகை என்ன, தனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா, சர்க்கரை நோய் உண்டா எனத் தன்னுடைய உடல்நலனைப் பற்றி எதுவுமே தெரிந்திராத ஜீவன். இவர்களின் மகனுக்குச் சிறுநீரகத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது. பள்ளி செல்லும் பதின்பருவச் சிறுவன் அவன். அவனை மருத்துவமனையில் சேர்ப்பதிலிருந்து மருத்துவம் பார்த்து வீடு திரும்பும் வரையிலான நாட்களை நிதானமாகவும் அப்பட்டமாகவும் விவரிக்கிறது ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவல்.

மகனின் உடல் நோவு, அவனுடைய அவஸ்தையைக் கண்டு பெற்றோர் படும் துயரம், மருத்துவமனையில் ஒவ்வொரு நாளையும் கடத்துவதில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, மருத்துவமனை அமைப்பு செயல்படும் விதம், அந்த அமைப்பின் இயந்திரத்தனமான இரக்கமற்ற அணுகுமுறைஞ் இவற்றைப் பேசுவதைப் பிரதான உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இந்நாவலை விவரிப்பதற்கு அப்பாவின் பார்வையில் கதையைச் சொல்ல முயன்றிருந்தால் அது ஒரு எளிமையான உத்தியாக இருந்திருக்கும். மருத்துவமனையின் வெவ்வேறு பகுதிகளுக்கு அவர்தான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பவர். இந்த நாவலின் ஆசிரியரான இமையத்தின் வயதை ஒப்பிடுகையில், அப்பா பாத்திரத்தின் மொழிநடையை வெளிப்படுத்துவது ஒருவகையில் இலகுவானதும்கூட. மாறாக, இங்கே முழுக் கதையையும் சொல்லிக் கொண்டிருப்பது மகன். அவனுக்கு வயது பதினைந்துதான். இப்படிக் கதை சொல்லத் துணியும்போது எழுத்தாளருக்கு இங்கே சில எல்லைகள் வகுக்கப்பட்டுவிடுகின்றன. பதின்பருவச் சிறுவனுக்குரிய மொழியையும் அறிவையும் மீறி எழுதிவிட முடியாது என்பது முதல் வரையறை; அவனுடைய அனுபவத்துக்கு உட்பட்ட மொழியை மீறி எழுதினால் புனைவுக்கான தர்க்கம் அடிபட்டுப் போய்விடும். அவன் பார்ப்பதை, கேட்பதை, கனவுகாண்பதை, சிந்தித்துப் பார்ப்பதைத் தாண்டி வேறு எதையும் பேசிவிட முடியாது என்பது அடுத்த வரையறை. இந்த வரையறைகளிலிருந்தும், வகுக்கப்பட்ட எல்லைகளிலிருந்தும் கொஞ்சமும் பிசகாமல் கதை சொல்லியிருக்கிறார் இமையம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!