ஏகவள்ளி

- முத்துவேல்

ரி வேலை பணம் வாங்க வந்தவர்களும். முதியோர் பென்ஷன் வாங்க வந்தவர்களும் விதவை பென்ஷன் வாங்க வந்தவர்களுமாய் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாவடி கணக்காய்க் கூட்டம் நிரம்பி வழிந்தது அந்த வங்கி. இடைக்கழிநாடு 24 ஊர்கள் தவிரவும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் இன்னும் பிற ஊர்களுக்கும் அது ஒன்றே ஒன்றுதான். ஊழியர்களுக்குச் சலசலப்பு தலைவலியாக இருந்தது. அதனால் எல்லோரையும் எரிந்து விழுந்தார்கள். இந்த நேரத்தில் கரண்ட் வேற போய்விட்டது. கசகசப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு ஓரமாய் இருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தான் வேலு.

சார் இது கொஞ்சம் ஃபில் பண்ணிக் குடுங்க” என்றபடி அவனிடம் வந்தாள் ஏகவள்ளி. வங்கிக் கணக்கு தொடங்கும் விண்ணப்பப் படிவம். வேலு அவளைப் பார்த்தான். அந்தக் குரல் எங்கேயோ கேட்டது போலிருந்தது. அவளின் முகமும் இளஞ்சிரிப்பும் அவனுக்கு நெருக்கமாய் இருந்தது. அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிறப் புடவையும் கறுப்பு நிற காட்டன் ஜாக்கெட்டும் அவனுக்குப் பிடித்த நிறங்கள். வசீகரம் குன்றாத அந்த முகத்தைத் தேடி அலைந்தபடியே முன்னும் பின்னுமாகப் புரட்டிப் படிவத்தை நிரப்பத் தொடங்கினான். கொஞ்ச நேரம் அவள் தந்த புகைப்படத்திலேயே அவன் கண்கள் குத்தி நின்றன.

பேரு சொல்லுங்க

ஏகவள்ளி.

வீட்டுக்காரு பேரு

வைரம்.

எந்த ஊரு

சூனாம்பேடு.

‘ஏகவள்ளியா நீ?’ என்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும்தான் கொஞ்சம் குழம்பினாள். மூக்கில் இருந்த வளைய மூக்குத்திக் கல் மின்னி மறைந்தது. உதடுகள் துடித்தன. “ஏய் வேலுதான. இன்னா இப்டி ஆயிட்ட எவ்ளோ முடி இருந்துச்சு. முடியெல்லாம் கொட்டிப் போயி அடையாளமே தெர்ல.” அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். தான் நின்றிருப்பது வங்கி என்பது ஒருகணம் மறந்துபோனது. அத்தனை வருடம் அடக்கிவைத்திருந்த வார்த்தைகளை ஒரேயடியாய்க் கொட்ட முடியாமல் திணறி திக்குமுக்காடி பரவசமும் படபடப்பும் அடைந்தாள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!