இந்து அடையாளமும் இனவயமாதலும்

அ.ஆஷிர் முஹம்மது

மீபத்தில் ஃபிரஞ்சு தத்துவவியலாளர் எட்டியன் பாலிபரது ‘இனம், வர்க்கம், தேசம்’ (Race, Class and Nation) என்ற புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை வாசித்து நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தபோது மேற்கத்திய உள்ளடக்கத்தில் இனம் என்ற சமூக, பண்பாட்டு, அரசியல் எதார்த்தம் எவ்வாறு வரலாற்று ரீதியாகப் பரிணமித்து வந்தது என்பது பற்றிய சில வெளிச்சங்கள் கிடைத்தன. அதனோடு இணையாக நாம் இடப்படுத்தப்பட்டிருக்கிற இந்தியச் சூழலில் இனம் என்ற திணையின் சமூக – அரசியல் பொருத்தப்பாடும் எதார்த்தமும் குறித்து இயல்பாகவே பேசத் தலைப்பட்டோம். அதாவது, மேற்கத்திய சமூகத்தில் காலனிய ஆக்கிரமிப்பு, பூர்வகுடி அழித்தொழிப்புகள், அடிமை வர்த்தகம், யூத வெறுப்பு என்பதில் தொடங்கி சமகாலத்தில் முந்தைய காலனிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் மீதான இனவாத பாகுபாடுகள், மூன்றாம் உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கமும் போர்களும் என இந்த நீண்ட வரலாற்று உள்ளடக்கத்தில் ‘இனம்’ என்ற வகைப்பாடு எவ்வாறு ஆதிக்கத்தையும் அடிமைப்படுத்துதலையும் நிலைநாட்டக்கூடிய பண்பாட்டுத் தொழில்நுட்பமாகச் செயல்பட்டது என்பது பற்றியே எட்டியன் பாலிபர் பேசுகிறார். அதிலும் குறிப்பாக, அவர் கவனம் குவிப்பது ‘இனம்’ என்ற திணை வெறுமனே உயிரியல் அடிப்படையில் மட்டும் கட்டமைக்கப்பட்ட கருத்தல்ல, மாறாக அது கலாச்சார ரீதியாக மக்கட்குழுக்களை இருமை எதிர்வான பண்புகள் கொண்டவர்களாக உருவமைத்து ஒன்றின் மீதான இன்னொன்றின் ஆதிக்கத்தை நியாயங்கண்டு இயற்கையானதாக்குகிறது என்பதும்தான்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!