ஆப்பிரிக்க மொழிவழியாகப் புரட்சிக்கான மாற்றங்களை ஏற்படுத்தியவர் கூகி வா தியாங்கோ (Ngugi Wa Thiongo). இவர் சென்ற மாதம் (28.05.2025) தனது 87ஆம் வயதில் காலமானார். பின்காலனியச் சொல்லாடலைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகி வா தியாங்கோ, 1938இல் பிரிட்டிஷ் காலனியத்திற்குட்பட்ட கென்யாவில் பிறந்தவர். தாய்மொழி வழியாகச் சிந்திக்கும் சிந்தனையாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான கூகி வா தியாங்கோ, கிழக்காப்பிரிக்காவின் சிறந்த எழுத்தாளுமையாக அறியப்பட்டவர். இவரது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விவாதத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சொந்த மண்ணை, மக்களை, பண்பாட்டை நேசித்த ஓர் உன்னதக் குரல் கூகி வா தியாங்கோ.
ஆங்கில இலக்கியம், ஒப்பிலக்கியம், நாடகத்துறை ஆகியவற்றில் பேராசிரியராக, வடமேற்குப் பல்கலைக்கழகத்திலும், யேல் (Yale) பல்கலைக்கழகத்திலும், நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் கூகி பணியாற்றியுள்ளார். 1980களில் நைரோபி பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும் இலக்கியத்துறை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then