20
கோட்டைமேடு
மேடு, நத்தமேடு என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும்போது கோட்டைமேடு என்ற சொல்லும் இதற்குள் வந்து உலவுகிறது. நந்தன் மன்னன் என்பதற்கும், கோட்டைமேடு என்ற இடத்தின் பெயர் அதோடு தொடர்புகொண்டிருப்பதற்குமான தர்க்கத்தைப் படவேட்டில் நிலவும் கதையில் பார்த்தோம். அதாவது, அங்கு கோட்டைமேடு என்ற பெயரை நந்தன் கோட்டை இடிந்து உருவான இடமாக உருவகித்துக்கொள்கிறார்கள். மன்னன் என்று சொல்கிறபோது அவன் ஆண்ட கோட்டையும் இருந்திருக்க வேண்டும் என்பது இதன் பொருள். நத்தமேட்டு விளக்கங்களுக்கும் இப்பெயருக்கும் அதிக வேறுபாடுகளில்லை. மனிதர்கள், ஊர், அரண்மனை, கோட்டை ஆகியவை மொத்தமாகவோ தனியாகவோ அழிந்து உருவான மேடு என்பதனால் நத்தமேடானது. இவ்வாறு இடிவதில் கோட்டையும் அடங்கியிருக்கிறது. மன்னன் வாழ்ந்த அரண்மனை என்பதற்கும் கோட்டை என்பதற்கும் அதிக வேறுபாடுகளை மக்கள் கொண்டிருக்கவில்லை. பட்டீஸ்வரத்தில் அரண்மனை இடிந்ததாகச் சொன்னதை இவற்றோடு பொருத்திக்கொள்ளலாம். கோட்டைமேடு என்ற பெயர் படவேட்டில் மட்டுமல்ல, நத்தமேடு போல தமிழகமெங்கும் இருக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. அதேவேளையில் அதனை நத்தமேட்டைக் குறிப்பதற்கான மாற்றுச் சொல்லாகவும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உவேசா அவ்வாறுதான் கோட்டைமேடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then