சிதைக்கப்படும் ஜனநாயக மாண்புகள் – அ.முத்துக்கிருஷ்ணன்

சிறப்புப் பகுதி: சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம்

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை 2,751 அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன. 18 வயதைக் கடந்த இந்திய வாக்காளர்கள் ஜனநாயகத்தின் பலம் பொருந்திய ஆயுதமான வாக்குச் சீட்டின் மூலம் கொடுத்த தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளன. இதுதான் தேர்தல் ஜனநாயகத்தின் வரலாறாக, மாண்பாக இருந்துவந்துள்ளது.

பொதுவாகத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சியமைக்கும், தோல்வியடைந்தவர்கள் மீண்டும் மக்களிடம் சென்று அடுத்த தேர்தல்வரை வேலை செய்வார்கள். ஆனால், 2014இல் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த நடைமுறைகளைத் தலைகீழாக மாற்றியது. அவர்கள் தோல்வியடைந்த பிறகு எந்த மாநிலத்திலும் மக்களிடம் செல்லவில்லை. மாறாக, வெற்றிபெற்ற பிற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சைகளை அதிரடியாக மிரட்டி விலைக்கு வாங்கும் புதிய சீர்கேட்டை இந்திய அரசியலில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

2014இல் அருணாசலப் பிரதேசத்தில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 44 பேருடன் காங்கிரஸ் ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளில், பேமா காண்டு என்ற சட்டமன்ற உறுப்பினர் தன் சகாக்கள் சிலருடன் காங்கிரஸிலிருந்து வெளியேறி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். உடனடியாக அவரது கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்தது. பேமா காண்டு பேரம் பேசி, மீண்டும் காங்கிரஸில் இணைந்து முதல்வரானார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்தார். இப்போது அவரே தனது மக்கள் கட்சியின் சார்பாக ஆட்சியமைக்கும் உரிமை கோரி, பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.

மணிப்பூர் மாநிலத்தில் 2017இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் 28 இடங்களையும் பாஜக 21 இடங்களையும் கைப்பற்றின. பாஜக மேலிடம் மத்திய அமைச்சர்கள் பியுஸ் கோயால், பிரகாஷ் ஜாவ்டேகர் இருவரையும் மணிப்பூரில் முகாமிடச் செய்தது. அங்கேயிருக்கும் என்.பி.பி கட்சியின் நான்கு உறுப்பினர்களையும் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரையும் தங்கள் பக்கம் வரச் செய்து பாஜக ஆட்சியை அமைத்தது. 2017இல் கோவா மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது, 40 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 17 இடங்களை வென்றது, பாஜக 13 இடங்களை வென்றது. இந்தமுறை பாஜக மேலிடம் நிதின் கட்கரியையும் மனோகர் பாரிக்கரையும் பனாஜியில் முகாமிடச் செய்தது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவார் ஃபார்வர்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கோவாவில் ஆட்சியை அமைத்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!