கல்விச் சூழல் மாறுமா? – பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

சிறப்புப் பகுதி: சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம்

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பட்டம் பெறுவது வெறும் வேலைக்காக அல்ல, தமக்கான கண்ணியத்தைத் தருவதாக மக்கள் கருதுகிறார்கள். வாய்ப்புகள் மறுக்கப்படுதல், சமூக – கல்விப் பின்தங்கல் போன்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர்த்துப் போராடிப் பெறும் பட்டம், பொருளாதார ரீதியாக ஒருவருக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ, சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத் தருகிறது. எதுவுமே சம்பாதிக்க முடியாத ஒருவரால் கல்வி பெற்றவுடன் பலருக்கும் பலவகையிலும் உதவ முடிகிறது; சமூகத்திற்கே பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது.

தமிழ்நாடு அரசு, துறை சார்ந்த பல்கலைக்கழகங்களை மாநில அரசின் பல்கலைக்கழகங்களாக உருவாக்கியுள்ளது. இத்துணைப் பல்கலைக்கழகங்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் பார்க்க இயலாது. மாவட்டந்தோறும் கலை – அறிவியல் கல்லூரிகள் என்பதையும் தாண்டி மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி பயிலும் வாய்ப்பும், மேல்நிலைப் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் வாய்ப்பும் தமிழ்நாட்டில் உள்ளது.

இத்தகைய சூழலில், தேசியக் கல்விக் கொள்கை 2020, இருக்கும் கல்லூரிகளை மூடும் சூழ்ச்சியைச் செய்கிறது. பலவீனமான பள்ளிகளை இணைத்து ‘பள்ளி வளாகம்’ என்று பள்ளிக் கல்வியைச் சிதைப்பது போலவே, உயர்கல்வியிலும் ஒற்றைத் துறைக் கல்லூரிகளே இருக்கக் கூடாது, பல்துறை உயர்கல்வி நிறுவனங்களாக அனைத்துக் கல்லூரிகளும் மாற வேண்டும் அல்லது கல்லூரிக் குழுமம் (College Clusters) அமைந்திட வேண்டும் என்று கூறுகிறது.

பல்கலைக்கழகம் அதன் ஏற்புடைய கல்லூரி என்ற கட்டமைப்பு முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டு ஒவ்வோர் உயர்கல்வி நிறுவனமும் தானே பட்டம் வழங்கும் முழுமையான தன்னாட்சி நிறுவனங்களாக மாறும். இத்தகைய அமைப்பு தனியார் இலாப வெறிக்கு உதவும்; அரசு நிறுவனங்களைச் சுயநிதி நிறுவனங்களாக மாற்றும்; கல்வியியல் மேம்பாட்டிற்கு உதவாது. கல்லூரிக்குள் நுழைவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு, மூன்றாண்டு பட்டப் படிப்பை நான்காண்டு படிப்பாக மாற்றி ஒவ்வோர் ஆண்டும் முழுத் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த ஆண்டிற்குச் செல்ல முடியும். மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காமாண்டு செல்ல CGPA புள்ளி 7.5 பெற்றிருக்க வேண்டும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. ஒவ்வொரு நிலையிலும் வெளியேற வாய்ப்புகளும், எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மீண்டும் தொடர்ந்து படிக்கலாம் என்கிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!