தமிழ் தலித் இலக்கியப் பயணத்தினூடாகச் சில குறிப்புகள் – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் கறுப்பு இலக்கியம்

இந்தியாவிலுள்ள தலித் மக்களின் நிலையை உலகிலுள்ள வேறு ஏதேனும் குழுவோடு ஒப்பிடுவதென்றால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கறுப்பின மக்கள்தாம். டாக்டர் அம்பேத்கர் கூட தன்னுடைய சாதி ஒழிப்பு நூலில் தீண்டப்படாத மக்களின் நிலையோடு கறுப்பினத்தவர்களை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். மற்றவர்களைக் காட்டிலும் கறுப்பினத்தவர்களோடு தலித்துகளை ஒப்பிடுவதற்கான காரணம் என்ன? எந்த நியாயமான காரணமும் இல்லாமல் கறுப்பினத்தவர்கள்மீது நிறத்தை அடிப்படையாகக்கொண்டு பாகுபாட்டைச் செயல்படுத்துவது இந்தியச் சாதிய அணுகுமுறையோடு தொடர்புடையதென்பதால் இந்த ஒப்பீடு இயல்பாக உருவாகிறது. கறுப்பின அடிமைமுறைக்கு எதிரான போராட்டங்கள் சாதிய அடிமைமுறைக்கு எதிரான போராட்டங்களோடு ஒப்பிடக்கூடிய நிலையையும் இதனாலேயே பெற்றிருக்கிறது.

இவ்வாறு தலித்துகளையும் கறுப்பினத்தவர்களையும் ஒப்பிடுவது இருபதாம் நூற்றாண்டில் அழுத்தம் பெற்றது. கறுப்பினத்தவர்களின் போராட்டம் நீண்ட காலமாக நடந்து வந்திருப்பினும் இரண்டாம் உலகப்போருக்குப் (1939-1945) பின்னரே அவை வலுவாக எழுச்சி பெற்றது. 1954 ஆம் ஆண்டு இனப்பாகுபாட்டுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தொடங்கி 1960களில் மார்ட்டின் லூதர்கிங் மேற்கொண்ட குடியுரிமைப் போராட்டங்கள், மான்ட்கோமரி புறக்கணிப்புப் போராட்டம், மால்கம் எக்ஸின் எழுச்சி, முகமதுஅலி – பாப்மார்லி ஆகியோரின் வருகை போன்றவை கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் தங்களின் நிலையோடு ஒத்த கறுப்பினத்தவர்களின் போராட்டங்கள் இந்தியாவில் சாதியெதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட தலித்துகளையும் ஈர்த்தன. அவை ஒரே மாதிரியானதாக இருக்கவில்லையென்றாலும் எவ்வாறெல்லாம் தொடர்பு பெற்றிருந்தன என்று பார்க்க வேண்டியது அவசியம். அதிலும் கறுப்பினக் குரலின் தாக்கமும் தொடர்பும் இங்கு கலை இலக்கியத் தளத்திலேயே மிகுதியும் பிரதிபலித்தது. அதனை அறிவது இக்கட்டுரையின் நோக்கம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!