குமாரி ஆன்னி ஸ்மித்தின் காதல்கள்

யுவன் சந்திரசேகர்

இருபதாம் நூற்றாண்டு விடிந்த ஆறே நாளில் குமாரி ஆன்னி ஆர் ஸ்மித் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்கினார். அப்போது அவருக்குப் பத்தொன்பது வயது. தொண்ணூறு வயதுவரை உயிரோடிருந்தார். இரண்டு தகவல்கள் – ஒன்று, சாகும்வரை குமாரியாகவே வாழ்ந்தார். இரண்டு, அவருடைய இந்திய வாசம் முழுவதையும் சிம்லாவிலேயே கழித்தார். அதாவது, வந்திறங்கிய மூன்றாம் நாள் சிம்லாவை நோக்கி மலையேறியவர், இறுதிநாளில் அதைவிட மேலேறிச் சென்றாரே தவிர, சமவெளிக்கு இறங்கி வரவேயில்லை…’முழுமையுறாத நாட்குறிப்பு’ என்ற தமது நூலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

முதலில் ’பத்தொன்பது முதல் தொண்ணூறு வரை’ என்றுதான் தலைப்பிட எண்ணியிருந்தேன் – ஓசை நயம் கருதி. ஆனால், நினைவுகள் பற்றிய உறுதி தளரத் தொடங்கி, கண் முன்னால் பிரம்புத் தட்டில் இருப்பது ஆப்பிளா, ஆரஞ்சா; அன்றன்று விடியும் பொழுதுக்குப் பெயர் என்ன, செவ்வாயா, புதனா அல்லது ஞாயிறா என்கிற மாதிரிக் குழப்பங்கள் ஆரம்பித்த எண்பத்தாறாம் வயதில் நாட்குறிப்பு எழுதுவதை விட்டுவிட்டேன். தவிர, தன்னிச்சையாக நினைவில் ஊறும் சம்பவங்கள் எனக்கு நேர்ந்தவைதானா, யாருக்கோ நடந்து கேள்விப்பட்டவையா என்ற குழப்பம் வேறு அடிக்கடி நேர்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரியையும், எழுதி முடிக்கும்போது, என்னைப் பற்றித்தான் எழுதினேனா எப்போதோ இருந்த யாரையோ பற்றியா என்கிற சந்தேகமும் எழுந்து திமிறுகிறது. இதுவெல்லாம் போகட்டும், எத்தனை வயதுவரை இருக்கப் போகிறேன் என்பதே தெரியாத போது, அவ்வளவு உறுதியாகத் தலைப்பிட வேண்டியதில்லையே!

ஆனால், எழுதுவதை நிறுத்தியதன் நிஜமான காரணம், எத்தனை முறை நாட்காட்டியைப் பார்த்த பிறகும், அதிலுள்ள எழுத்துகளின் பொருள் புரிந்த பிறகும் கூட, கொஞ்ச நேரம் கழித்துப் பழைய குழப்பம் மேலோங்கி விடுகிறது. புதன் கிழமைகளில் ஒயினும், சனிக்கிழமைகளில் பிராந்தியும் மட்டுமே அருந்துவேன் என்று சபதம் மேற்கொண்டிருப்பதால், கிழமையின் பெயர் மறக்காமலிருப்பது மிக மிக முக்கியமானதாகி விடுகிறது…

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!