சகாவு சஜீதா

- சாம்ராஜ்

கோட்டயம் மேலங்கோட்டு சஜீதாவின் புகைப்படத்தை 70-களில் கேரளத்தில் பிரசுரிக்காத பத்திரிகைகளே இல்லை. அவர் முண்டும் ஜாக்கெட்டுமாய் போலீஸார் சூழ கைவிலங்கோடும் தீரத்தோடும் நிற்கும் புகைப்படம் உலகமெங்கும் பிரபலம். போலீஸ்காரர்கள் சிரிக்க அட்டப்பாடி போலீஸ் ஸ்டேஷன் முன்பு அவரை நிறுத்தி எடுக்கப்பட்ட புகைப்படம். அக்காலத்தில் பல இடது வலது மார்க்சிய அமைப்புக்காரர்கள் அந்தப் புகைப்படத்தை வெட்டி ரகசியமாக தங்கள் புத்தகத்தின் மத்தியில் ஒளித்து வைத்திருந்தார்கள்.

அன்றைக்கு ஒன்றுபட்ட சாருமஜும்தார் தலைமையிலான இந்திய பொதுவுடைமை (மார்க்சிய லெனின்) கட்சி மாத்திரமே செயல்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கூடுதலாக இயங்கினர். அன்றும் இன்றும் ஆதிவாசிகளின் வாழ்வு துயரத்திற்குள்ளானதாகவே இருந்துவருகிறது. இவர்கள் மத்தியில் ML குழு வேலை பார்த்தார்கள். உள்ளூர் ஆதிக்க சக்திகளுக்கும் பெரும் எஸ்டேட் முதலாளிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் எதிராக ஆதிவாசிகள் சார்பில் இ.பொ.க.மா.லெ குழுவே பதிலடி கொடுத்தது. அது அவர்களுக்குப் பெரும் செல்வாக்கை பெற்றுத் தந்தது.

அட்டப்பாடி காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றது அவர்களின் பெரும் வெற்றிகளில் ஒன்று. அரசாங்கம் மிகத் தீவிரமாக வேட்டையாடத் துவங்கியது. இவர்களிடம் பெரிய ஆயுத பலம் கிடையாது. முறையான ஆயுதப் பயிற்சியோ போராட்ட யுக்தியோ கிடையாது. மக்கள் செல்வாக்கு மற்றும் மனோதிடத்தை மாத்திரமே கொண்டு போராடியவர்கள், சீக்கிரமே சிக்கினார்கள். சகாவு சஜீதா உட்பட எட்டுத் தோழர்கள் காட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார்கள். பின்னாட்களில் மிகப் பிரபலமான மலையாளக் கவிஞர், போலீஸ் சுற்றி வளைத்தபோது மயிரிழையில் தப்பிச் சென்னைக்கு வந்து அன்றைக்கு மலையாள சினிமாவில் அகங்காரத்துக்குப் பெயர் போன நடிகர் குமாரனின் மகாலிங்கபுரம் வீட்டில் 6 மாதம் தலைமறைவாக இருந்தார். 90-களில் அவரது சுயசரிதையான ‘ஒளிவு திவசங்களில்’ நூலில் அதை எழுதியிருக்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!