சுளுக்கு

- சிவகுமார் முத்தய்யா

செம்பவ சாம்பவன் என்ற நண்டு திண்ணையில் முடங்கிப் போய் நேற்றோடு மூன்று வருடம் ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அது வடக்கு பார்த்த ஓட்டு வீடு. மேற்கும் கிழக்குமான தெருவில் கடைசியாக அமைந்திருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாகத்தான் அவரின் நிலமை மோசமாகியிருந்து. பேருக்கு உள்ளூர் கம்பவுண்டர் லெட்சுமணனை அழைத்து வந்து காட்டினர்கள். பரிசோதனை செய்து அவர் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு “தாங்காது” என்று ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். தெருவே கூடிவிட்டது. கீழ்வேளூரில் இருந்து மகள் பஞ்சவர்ணம் அரக்கப் பரக்கக் கிளம்பி வந்து கண்ணீர் விட்டாள். அப்பாவுக்கு ஆசையாகக் கையோடு வாங்கி வந்திருந்த அல்வாவை எடுத்துப் புகட்டிவிட்டாள். பின் நாக்கு வரை சென்றது தொண்டைக்குள் இறங்கவில்லை. பால் ஊற்றச் சொன்னார்கள் மறுத்து விட்டாள். தெருவில் இருக்கும் சிலர் வாசலில் வந்து அமர்ந்து விட்டார்கள். ”அந்தா போச்சு இந்தா போச்சு” என்று இரண்டு நாளில் இரண்டு தடவை உயிர் போய் திரும்பி வந்திருந்தது. இத்தனை நாட்களாக எவருக்கும் தொல்லை கொடுக்காமல் தனது காலைக் கடன்களை எவர் உதவியும் இன்றி முடித்துக் கொண்டவர். இன்று தனது சுயநினைவை இழந்து கிடக்கிறார் .

நடை புழக்கமாக இருந்தபோது, இரவு வேளை உணவின்போது மட்டும் மருமகள், பேரப்பிள்ளைகளிடம் சில வாரத்தைகள் மட்டும் பேசுவார். பிறகு தெருவையே பார்த்துக்கொண்டிருப்பார். படுக்கையிலேயே பெரும்பொழுதுகளைக் கழிப்பார். இரவு கொத்தனார் வேலைக்குச் சென்று வரும் மகன் மதி வெற்றிலை பாக்கு வாங்கி வருவான். அதனை மட்டும் சாப்பிட்டு விட்டு ஒரு ’தரத்துக்கு’ போட்டுக் கொள்வார்.

மூன்று வருடங்களாக நல்ல தூக்கமில்லை என்று நலம் விசாரிப்பவர்களிடம் சொல்லுவார். எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றி பினாத்திக்கொண்டிருப்பார். ஆனால் அவர் பேசும்போது சொற்களுக்கு அதிக சத்தம் இருக்காது. இரண்டு மகன்களில் இளையவன் மதி வீட்டில்தான் இருக்கிறார். மூத்தவன் மகேந்திரன் நகராட்சியில் வேலை பார்த்துக்கொண்டு பக்கத்து டவுனில் இருக்கிறான். மாதம் ஒரு முறை வந்து குடும்பத்துடன் பார்த்துச் செல்வான். மதி தொடங்கி மருமகள், பேரன் பேத்தி வரை “இப்படிப் படுக்கையில் கிடந்து இரவு தூக்கத்தைக் கெடுக்கிறாரேஞ் மனுசன்” என்று தொடக்கத்தில் கோபம் கொண்டனர். காலப்போக்கில் அவரால் பெரிய தொந்தரவு ஒன்றும் இல்லை என்பதால் பழகிவிட்டிருந்தனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!