தியத பார்க்

- புல் புல் இஸபெல்லா

ந்தப் பார்க்கில் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, உரசுவதெல்லாம் அவர்களுக்குச் சம்பிரதாயமில்லையாம். குழந்தைகள், குடும்பங்கள் நடமாடும் இடமாம். குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டதாகக் கருதிக்கொண்டிருக்கும் அவ்விருவரையும் பார்க் காவலாளிகள் குரலுயர்த்தி அதட்டிய அதட்டில் பேயறைந்து போய்க் கூனிக்குருகி நின்றார்கள். பலரும் கால் தெறிக்க ஓடி வந்து புதினமாய் வியந்து பார்க்க ஆரம்பித்தனர். முகத்தில் அரும்பி வழியும் வியர்வையையும் கைக்குட்டையால் துடைக்க நாதியற்று விரல்களால் நெற்றியை மட்டும் வழித்துவிட்டான். அந்தப் பெண் பயத்தில் நடு நடுங்கி கைகளை இறுக்கச்சுருட்டியவாறு அவன் சட்டையை இழுத்துப்பிடித்து அவனில் தன்னை மறைத்துக்கொள்ள எத்தனித்தவாறே அவன் பின்னால் புதைந்து அழ ஆரம்பித்தாள். அவளுடன் வந்தவன் அம்மி விழுங்கியவன் போல எதுவும் பேசாமல் நின்றான்.

பாத்திமாவால் அதற்கு மேல் அங்கே மூச்சுக்கூட விடமுடியவில்லை. ஓட்டமெடுக்க ஆரம்பித்து இனி இந்தக் குளப்பக்கம் வரவே கூடாதென மனதுக்குள் முடிவெடுத்ததை வெளிப்படுத்தும் முகமாகப் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள். எதிர்கொள்ளப்போகும் மரங்களின் பின்புறங்களிலும் இருள் விரவியிருந்த பகுதியிலும் சிலர் ஒருவரையொருவர் கண்களால் எதிர்நோக்கிக் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாகவும் முத்தமிட்டுக்கொண்டும் அமர்ந்திருந்தனர். அதிலும் ஒரு சிலர் புறச்சூழலையே மறந்தவர்களாகவும் பிறர் யாரும் வந்துவிடுவார்களோ என்கிற பீதியுடனும் மரத்தின் பின்னால் நின்று தலையைச் சாய்த்து எட்டிப்பார்த்தவாறிருந்தனர். அவர்களையும் கூச்சலிட்டோ விசிலடித்தோ நிலை குலையச்செய்து பைபிளும் சிலுவையும் ஏந்தாத பாதிரியார்கள் போல புத்திமதி கூறி கூடவே மன்னிப்பும் வழங்கி அசிங்கப்படுத்தக்கூடுமென எண்ணிக்கொண்டு அவர்களைப் பார்த்தும் பார்க்காதவளாய்த் தன் முன்னால் எட்டுவைத்துக் கால் பதியப்போகும் கிறவல் நிலத்தையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்துப் பெருமூச்சு விட்டவளாய்த் திசை மாற்றி ஓடிக்கொண்டே இருந்தாள்.

அன்று ‘அவுறுது’. தமிழ் சிங்களப் புதுவருட தினத்தை அப்படித்தான் அவள் வசிக்கும் பிரதேசத்திலுள்ளவர்கள் சொல்லுவார்கள். பால்ச் சோறும் கட்டச்சம்பலும், அல்வா, முறுக்கு, கேக், பயத்தம் பணியாரம் எனக் கண்களுக்கு விருந்தளிக்கும் பல்வகை உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதும் உறவினருக்கும் அயலவருக்கும் பகிர்வதுமாய் உலாவித்திரிந்தனர். அவளின் வீட்டை அண்டிய விகாரையில் இடைவிடாமல் (ஙி) பனை ஓதிக்கொண்டிருந்ததானது நோன்புகாலப் பள்ளிவாசல்களில் குனூத் ஓதுவதை ஞாபகமூட்டியது. அவளுக்கு மதியநேரமே மேல்தட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் அக்காவிடமிருந்து ஒரு பீங்கான் பலகாரம் வெள்ளை டிஸ்சூவினால் மூடியபடி வந்துவிட்டது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!