உமர் காலித்: பாஸிச எதிர்ப்பு வெகுமக்களிய இயக்கங்களும் பயங்கரவாதச் சட்டங்களும்

அ.ஆசிர் முஹம்மது

சிஏஏ போராட்டத்திற்கெதிராக டெல்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவல்துறையின் ஆதரவோடு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஷஹீன் பாக் போராட்டங்களையும் இன்னபிற சிஏஏ போராட்டங்களையும் டெல்லியில் ஒருங்கிணைக்க உதவிய மாணவத் தலைவர்களில் ஒருவரான உமர் காலித், 2020 செப்டம்பரில் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த ஜூன் 9 அன்று தனது சிறைவாசத்தின் 1000ஆவது நாளைத் தொட்டிருக்கிறார். நடந்த வன்முறைகளுக்குக் காரணம் சிஏஏ போராட்டங்கள்தாம் என்றும், அப்போராட்டங்களுக்கு மூளையாகச் செயல்பட்டார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. போராட்டங்களைப் பயன்படுத்திச் சாலையை மறித்தல், வகுப்புக் கலவரங்களை உருவாக்கியது, “இந்திய அரசைப் பணிய வைக்க வேண்டும்” என்று பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான யூஏபிஏ, தேசவிரோதச் சட்டம், இன்னும் ஏனைய கிரிமினல் வழக்குகளின் கீழும் கைது செய்திருக்கிறார்கள். கலவரங்களில் உயிரிழந்தவர்களிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் என்றாலும் கலவரத்துக்கான மூளை என்பதாகக் கைது செய்யப்பட்ட பதினெட்டுப் பேரில் பதினாறு பேர் முஸ்லிம்கள் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் காவல்துறை எவ்வாறு நியாயமாக நடந்துகொண்டுள்ளது என்பதை.

உமர் காலித் ஆயிரம் நாட்களாகச் சிறையில் இருக்கும் இச்சமயத்தில் இந்துப் பாசிசத்திற்குச் சவால்விடக்கூடிய வெகுமக்களிய போராட்ட இயக்கங்களின் தேவை, அதில் மாணவர்கள் மற்றும் பொது அறிவுஜீவிகள் வகிக்கும் பாத்திரம், இத்தகைய வெகுமக்கள் இயக்கங்களை ஒடுக்கத் தேசவிரோத – பயங்கரவாதச் சட்டங்களும், அதற்கான அரசு நிறுவனங்களும் முடுக்கிவிடப்பட்டு மக்கள் தலைவர்களும் அறிவுஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஒடுக்கப்படும் முறைமை குறித்தும் இக்கட்டுரையில் பேசியுள்ளேன்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!