பாட்டல் ராதா: சமகாலச் சமூகச் சிக்கலின் ஆவணமாக்கம்

ஞா.குருசாமி

மீபத்தில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தின் இயக்கத்தில் வெளியான படம் ‘பாட்டல் ராதா’. மதுவால் குற்றங்களும் இறப்புகளும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ‘பாட்டல் ராதா’ பேசுகிற விசயம் முக்கியமானது. மது, குடிப்பவர், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சார்ந்து நியாயமான உரையாடலைக் கோருகிறது. சக மனிதர்களின் தொலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டுக்கொடுக்கும் பொறுப்பு அனைவருக்குமானது என்பதை அழுத்தமாகச் சொல்லும் இப்படம், சமகாலச் சூழலுக்குத் தேவையாகும் விதத்தைப் பற்றி யோசிப்பது அவசியமானது. அதற்கு முன் படத்தின் கருவைப் புரிந்துகொள்ள அது தொடர்பான வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

I

மனிதனின் வாழ்வில் மது ஓர் அங்கம். மது இன்றி மனித வாழ்வின் லௌகீகத்தை எழுத முடியாது. தமிழ்ச் சமூகத்திலேயே வீட்டிலும் ஊர்ப்பொதுவாகவும் மது காய்ச்சி, வடிகட்டி, குடித்துத் திளைத்த தொன்மை வாழ்வுக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. மருந்துப் பொருளாகவும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. வீட்டுப் பிரசவத்தில் குழந்தை பிறந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறிய அளவில் வலி நிவாரணியாகத் தண்ணீர் கலக்காத காட்டமான மது கொடுப்பதுண்டு. தேள் கடிக்கு மருந்தாகக் கொடுக்கும் வழக்கமும் கிராமங்களில் இருந்தது. குடி மயக்கம் தெளியும்போது கடி வலியும் குறைந்திருக்கும். அமெரிக்காவில் மதுவிலக்கு இயக்கங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னால் மது வகையில் ஒன்றான சைடர் தயாரிப்பதற்குரிய மூலப்பொருளான ஆப்பிளை விளைவிக்கச் சொல்லி அரசாங்கமே புதிய குடியேற்றங்களை ஊக்குவித்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger