சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்கள் சார்ந்து தமிழ் இலக்கியத்தில் உண்டாகியிருக்கும் தாக்கங்கள் முக்கியமானவை. அத்தாக்கத்தை ஏற்படுத்தியதில் தலித் எழுத்துகளுக்குப் பிரதானமான இடமுண்டு. அந்த வகையில் தலித் அடையாளத்தோடு தமிழில் வந்த ஆரம்பப் படைப்புகளில் ஒன்றாக பாமா எழுதிய கருக்கு நாவலைக் (1992) குறிப்பிடலாம். அந்நாவலுக்கு முன்பே முன்னோடி படைப்புகள் வெளிவந்துவிட்டிருந்தன என்றாலும் தலித் என்னும் தீர்மானகரமான சொல்லாடலோடு வெளியானது கருக்கு நாவல்தான். நெடிய தமிழிலக்கிய மரபில் கருக்கு உண்டாக்கிய இடையீடு பாரதூரமானது. அதேபோலத் தமிழில் தலித் படைப்புக்கான உதாரணமாக அமைந்த இந்நாவல் ஆங்கிலத்திலும் இவ்வாறே அறிமுகமாகிப் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
கருக்கைத் தொடர்ந்து சங்கதி, வன்மம், மனுஷி என மொத்தம் நான்கு நாவல்களும், ஒரு தாத்தாவும் எருமைமாடும், தவுட்டுக் குருவி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 2000-ஆம் ஆண்டில் கிராஸ்வேர்ட் புக் விருதை பெற்றிருக்கும் பாமா பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை நீலம் பத்திரிகையின் முதல் இதழுக்காக சந்திக்க அணுகினோம். கொரோனா அச்சம் சூழ்ந்த பேரிடர் காலத்தில் மனம் உவந்து நேரிலேயே அழைத்து உரையாடலுக்கு இசைந்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then