மாட்டரசியலும் அரசியல் மாடுகளும் – ஜமாலன்

தாலாட்டுக்கு முன்பே
கேட்டது
பறையிசைதான்
தாய்ப்பாலின் வாசத்திற்கு முன்பே
நுகர்ந்தது
மாட்டுக்கறியைத்தான்

– பச்சோந்தி

மாடு வாழ்வியலிலிருந்து அரசியலுக்கு மாறிவிட்டதின் அவலத்தை ஒரு படைப்பாகப் பதிவுசெய்கிறது கவிஞர் பச்சோந்தியின் ‘பீஃப் கவிதைகள்.’ இந்துமதம் ஏன் மாட்டை ஒரு மாதாவாக, கடவுளாகக் கருதுகிறது என்ற கேள்விக்கான பதிலில்தான் இக்கவிதைகளின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. இன்றைய காவி பாசிச அரசியல் மாட்டைத் தெய்வமாக்கி, மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் பின்னுள்ள பார்ப்பனிய மனநிலையைக் கேள்விக்குட்படுத்தித் தலித் மற்றும் இஸ்லாமியர்களின் உணவாக, வாழ்வாதாரமாக, வாழ்வியலுடன் இணைந்த ஒன்றாக மாடு இருப்பதைப் பதிவு செய்கிறது. மாட்டைத் தெய்வமாக்கும் இந்துத்துவப் பண்பாட்டிற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு மீட்டுறுவாக்கத்திற்கான மாடுகளுடனான வாழ்வை அதன் உயிர்மையை முன்வைப்பதன் வழியாக ஒரு கலக இலக்கியமாக வெளிப்பட்டுள்ளது.

ஆடு, மாடு ஆகியவை ‘மந்தைகள் மேய்ப்பன்’ என்ற அமைப்பைக் கொண்டிருப்பவை. இதனால் பெரும்பாலான தீர்க்கதரிசிகளும் கடவுளர்களும் மேய்ப்பர்களாக இருந்துள்ளனர் என்பது இத்துடன் இணையாக உருவாகும் சிந்தனை. ‘செமட்டிக்’ மதங்களான யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களின் ஆப்ரஹாம், மோசஸ், ஏசு, முகமது (நபி), இந்து மதத்தின் யாதவ கிருஷ்ணன் ஆகிய அனைவரும் மேய்ப்பர்களாக இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணர், மோசஸ் கதைகள் ஒன்றுபோல இருப்பது இக்கதைகள் குறித்த உலகளாவியத் தொன்மப் புரிதலைத் தரக்கூடியவை. ஆக, மாடும் அதன் மேய்ப்பர்களும் உலகளாவிய மதங்களின் அடிப்படைத் தொல் படிமமாக உள்ளனர் என்பதே முக்கியம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!