“நீங்க பேசிக்கிட்டிருங்க, கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லி விட்டு பழனிவேல் எட்டுக் கை அம்மன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எதிரில் உட்கார்ந்திருந்த சாமியாரைப் பார்த்தேன். ஐம்பது வயதுக்குள்தான் இருக்கும். மொட்டை போட்டு பத்திருபது நாட்கள் இருக்கலாம். நல்ல நிறமாக இருந்தாள். முகமும் மார்பகங்களும் செழுமை யாகவே இருந்தன. கழுத்தில் நான்கு உருத்திராட்ச மாலைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள். திருநீரைக் குழைத்து நெற்றியில் பட்டையாகப் பூசியிருந்தாள்.
மஞ்சள் நிறத்தில் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாள். மரத்தை ஒட்டி ஒரு சாமி படமும், திருநீர் தட்டும் இருந்தன. மொட்டை போடாமல், தோடு, மூக்குத்தி, வளையல், செயின், விலையுயர்ந்த புடவை ஜாக்கெட்டு எனப் போட்டுக்கொண்டிருந்தால் சினிமா நடிகை மாதிரி இருப்பாள் என்று தோன்றியது. வந்த விஷயத்தை மறந்துவிட்டு என்னுடைய மனம் சாமியாரின் முகத்தையும், மார்பகங்களையும் பார்ப்பதில்தான் குறியாக இருந்தது.
“சாமி எங்கிருந்து வருது?”
“நாமக்கல்.”
“சாமிக்குச் சொந்த ஊரா?”
“இல்ல. பெரம்பலூர் பக்கம் அன்னமங்களம்.”
“அன்னமங்களமேவா?”
“ஆமாம்.”
“சாமிக்கு அன்னமங்களத்தில் வீடு எங்க?”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then