சுதந்திரத்தை யாரும் அன்பளிப்பாகப் பெற முடியாது!

இலஞ்சி அ.கண்ணன்

“தீண்டாமையின் வேர் சாதியமைப்பில் இருக்கிறது. சாதியமைப்பின் வேர் வர்ணாசிரமத்தில் இருக்கிறது. வர்ணாசிரமத்தின் வேர் பார்ப்பனியத்தில் இருக்கிறது. பார்ப்பனிய மதத்தின் வேர் எதேச்சதிகாரம் அல்லது அரசியலதிகாரத்தில் இருக்கிறது” என்று 1944இல் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

இந்துத்துவம் கோலோச்சுகிற இத்தருணத்தில் நாம் தீவிரமாக விவாதிக்க வேண்டியது மேற்கண்ட கூற்றைப் பற்றிதான். அதைச் சமகாலத்தில் விவாதித்து அதிலிருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்வதற்கான வழியைத் தேடாமல் நம்முடைய இலக்கை அடைய முடியாது. எனவே, நம்மீது திட்டமிட்டே நிகழ்த்தப்படக்கூடிய அநீதிகளுக்கெதிராகச் சட்டத்தின் உதவியை நாடுகிறபோது அங்கும் புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படுமாயின், நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவைப்பட்டால் சட்டத்திட்ட விதிமுறைகளை மீறவும் நாம் தயங்கக் கூடாது என்பதையுணர்ந்து செயலாற்ற வேண்டிய காலமிது. இதைத்தான் தொடர்ந்து நம்மீது நிகழ்த்தப்படும் மனிதத்தன்மையற்ற நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் 1,144 குற்றங்களும் 2020ஆம் ஆண்டில் 1,274 வன்கொடுமைக் குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், 2021இல் இந்த எண்ணிக்கை 1,377ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 2021இல் மட்டும் 53 தலித்துகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டு 5ஆவது இடத்தை வகித்த தமிழகம் இப்போது 7ஆவது இடத்தில் இருக்கிறது என்பது மேலும் கவலை அளிக்கிறது.

மற்ற மாநிலங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, தமிழ்நாட்டில்தான் ஒரளவுக்குப் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தலித் பெண்கள் மீதான தாக்குதலின் போது அவர்களைத் துன்புறுத்துவது மட்டுமல்லாது பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!