கறுப்புத் திரை – ஜா.தீபா

சமூகத்தின் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துத் தேடிக் கண்டடைந்த வரலாறு நினா சிமோனின் வாழ்க்கை. முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞராக அறியப்படுகிறார். ஆழமான, ஜீவனுள்ள குரல் கொண்டவர். எளிமையும் ஆழமும் கொண்ட பாடல்களை எழுதி இசையமைத்தவர். இந்தத் திறமைகளோடு அவர் எல்லோராலும் கொண்டாடப்படும் வாழ்க்கையினை வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. 1960களின் தொடக்கத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் கறுப்பினத்தவருக்கு எதிரான எந்தச் செயலுக்கும் எதிர்வினை ஆற்றினார். விளைவாக, புறக்கணிக்கப்பட்டார். அதன் வலியினை அவரால் தாங்கிக்கொள்ள இயலாமல் போனது. அதே நேரம் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெறுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காணாமல் போனார். அப்படி ஒரேடியாக மறைந்திருந்தால் இன்று அவர் குறித்துப் பேசியிருக்க மாட்டோம். அவர் மீண்டார். எழுபதாவது வயதில் இறக்கும் வரை அந்தப் பறவை மீண்டும் மீண்டும் தன்னை உயிர்த்தெழ வைத்துப் பாடிக்கொண்டே இருந்தது.

தான் நினைத்த வாழ்க்கைக்காகத் தன்னை உருமாற்றிக்கொண்டே இருந்தார் சிமோன். மனமும் சொல்லும் செயலும் ஒன்றாகவே ஆகியிருந்தார். இந்த நேர்மை அவர் வாழ்ந்த காலத்தில் புரிந்து கொள்ளப்படவில்லை. கடினமான ஆளுமையாகவே கணிக்கப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு அவர் குறித்த ஆவணப்படத்தினை லிஸ் கர்பன் என்பவர் எடுத்த பிறகு உலகம் மீண்டும் அவரைக் கொண்டாடத் தொடங்கியது. குறிப்பாக, பெண்கள் அவருடைய மனதை ஆழமாகக் கண்டறிந்தனர்; தங்களோடு பொருத்திக்கொண்டனர். அவர் பிறந்தது 1933ஆம் ஆண்டு. 90 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறவிப்பயனைக் குறித்துப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்குச் சரியான காரணமாக அமைந்திருக்கிறது இந்த ‘What happened , Miss Simome?’ ஆவணப்படம்.

இதன் தொடக்கத்தில் மாயா ஏஞ்ஜலோ சிமோனுக்காக எழுதிய குறிப்பு காட்டப்படுகிறது.  “மிஸ். சிமோன், நீ வழிபடப்பட்டாய், இப்போது கூடக் கோடிக்கணக்கானவர் உன்னை நேசிக்கிறார்கள். ஆனால், உனக்கு என்ன ஆனது , மிஸ் சிமோன்?”. மாயா ஏஞ்சலோவின் இந்தக் கேள்வியைத் தாங்கித்தான் ஆவணப்படத்தின் தலைப்பு நிற்கிறது. நினா சிமோனைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் என்பது தனிப்பட்ட மனுஷியின் வாழ்க்கையையோ, ஒரு பாடகியின் பயணமோ, முதல் கறுப்பினச் செவ்வியல் பியானோ கலைஞர் குறித்தோ மாத்திரமல்ல, பொது வாழ்க்கையின் அழுத்தங்களால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்படித் திசை மாறியது என்பதைத் தெரிந்துகொள்வதையும் சேர்த்ததுதான். அப்போதைய அமெரிக்காவில் அடிமைத்தனத்துக்காகக் குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. அதன் சாட்சியாக இருந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையே இந்த ஆவணப்படம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!