கவிதைகளெனும் பரிசுப் பெட்டிகள் – நெகிழன்

சில கவிதைகள் படித்தவுடன் புரிகின்றன. பலவும் காலத்தைக் கோருகின்றன. உதாரணத்திற்கு,

“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது”

என்ற பிரமிளின் இக்கவிதையை எடுத்துக்கொள்வோம். இக்கவிதை தொடக்கநிலை வாசகர்களிலிருந்து தீவிர வாசகர்கள் வரைப் புரிந்துகொள்ள முடிவதாய் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு அவருக்கு பிரமிளின் அனைத்துக் கவிதைகளுமே புரிந்துவிடுமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சில கவிதைகள் வாசித்தவுடனே பிடிபடும், சில கவிதைகள் பத்துப் பக்கங்களை வாசித்து பதினோராம் பக்கத்திலுள்ள கவிதையை வாசிக்கையில் அதோடு சேர்த்து அவிழும் தன்மை உடையவை. சில அதே கவிஞரின் வேறு தொகுப்பை வாசிக்கையிலோ அல்லது சில மாதங்கள் வருடங்கள் கழித்து நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஏற்படும் அனுபவங்கள், வாசிப்பில் கடக்கும் தூரங்கள் ஏதோ ஒன்றின் போது திறந்துகொள்பவை.

எழுதுவதிலும் சரி வாசிப்பதிலும் சரி கவிதைகள் காலத்தைக் கோருகின்றன. எனவே காலத்தைக் கையளிப்பவர்கள் அதன் வாசகர்களாயிருக்கின்றனர். அவர்களால் மட்டுமே கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. இதில் எனக்கும் கவிதைக்குமான உறவில் கவிதை எனக்குக் கொடுத்த சில பரிசுப் பெட்டிகளைப் பிரித்துக்காட்டி அவற்றில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒவ்வொரு புல்லையும்

பெயர் சொல்லி அழைப்பேன்

– இன்குலாப்

இவ்வரிகள் அகத்துக்குள் அளிக்கும் அனுபவங்கள் அலாதியானவை. புல்வெளி என்று மொத்தத்தையும் ஒரே வட்டத்தில் அடைத்துக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொன்றையும் தனித் தனியே பெயர் சொல்லி அழைத்தால் அது எப்படி இருக்கும். அந்தப் புற்களெல்லாம் எப்படி மகிழும். நினைத்துப் பார்க்கும்போதே புல் வாசம் பக்கத்தில் அடிக்கிறது. இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றுமே முக்கியமானது, அதனதனளவில் தனித்துவமானது எனும் சிந்தனை ஒரு புல்லான என்னை மிகவும் பரவசப்படுத்துகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!