இரயில் என்னும் பிசாசு பிறந்தது! – கோ.ரகுபதி

மனிதர்களிடத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கின்ற பொருளுக்குப் பதிலாக வடிவத்திலும் செயலிலும் புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டால் அச்சமும் ஆச்சரியமும் ஏற்படும். நீராவியால் நின்றும், நகர்ந்தும் இயங்கும் எந்திரங்களின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் குறிப்பாகச் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு செல்ல குதிரை வண்டிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட இரயில், சரக்குகளையும் மக்களையும் ஏற்றிச் சென்றபோது அச்சமும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

நகரும் எஞ்சின் நிலப்பரப்பெங்கும் ஓடியதைக் கண்டு பொது மக்கள் அச்சத்தில் ஓடினர். இது இரயில் எந்திரங்களின் சோதனையின்போதே ஏற்பட்டது. பாரிஸ் நகரில் 1769ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கலஸ் யோசப்பு கூன்யோ தான் உருவாக்கிய மூன்று சக்கர நகரும் எஞ்சினில் நால்வரை ஏற்றி வெள்ளோட்டம் பார்த்தார். மணிக்கு மூன்று மைல் வேகத்தில் நகர்ந்து கட்டுக்கடங்காமல் ஒரு சுவரில் மோதியதால் அது இடிந்து விழுந்தது. இதைக் கண்டோர் நிக்கலஸைப் பாராட்டவில்லை; மாறாக, இது துர்தேவதைகளின் சக்தி, தீயது; தீமையே விளைவிப்பது என வசை பாடினர். இதுபோன்ற அபாயகரமான கருவிகளைக் கையாளும் நபர்கள் மேன்மேலும் தீங்கு செய்ய இடமளிக்கக் கூடாதெனக் கூறி நிக்கலஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்!1

ஸ்காட்லாந்து நாட்டில் அயர்ஷைர் மாகாணத்தில் எந்திர நிபுணரின் மகனான வில்லியம் மர்டாக் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்கு நடந்தேசென்று ஜேம்ஸ் வாட், போல்ட்டன் ஆகியோரிடம் வேலைக்குச் சேர்ந்து சுரங்கங்களில் நீர் இறைக்கும் எந்திரங்களைப் பொருத்துதல், பழுதுபார்த்தல் பணிகளைச் செய்தவர் நகரும் எந்திரத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். கார்ன்வால் மாகாணத்தில் ரெட்ரூத் நகரில் பணியாற்றிய மர்டாக், ஓரடி உயரமுள்ள நகரும் பொம்மை எஞ்சினைத் தயாரித்து 1784ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் அதைப் பரிசோதித்தார். ரெட்ரூத் நகரின் தேவாலயத்துக்குச் செல்லும் பாதைக்கு நேராகப் பொம்மை எஞ்சினை இயக்கியபோது அது ‘புஸ், புஸ்’ எனச் சீறி ‘டப், டப்’ எனச் சத்தத்துடன் நகர நகர, அதன் பின் ஓடினார் மர்டாக். அப்போது ஒருவரின் கூச்சலைக் கேட்ட மர்டாக், அருகில் சென்றுபார்த்தபோது தேவாலயத்தின் மதகுரு அச்சத்தால் நடுநடுங்கி, வாய் குழறிக் கூக்குரலிட்டு நிற்கக் கண்டார். “இருள்சூழ்ந்த கீழுலகத்தில் வாழ்பவனாயும், தீமையே உருவாகியவனாயுமான சாத்தான், நெருப்பையும் புகையையும் கக்கிக்கொண்டு, தம் எதிரேவந்து, தம்மை அச்சுறுத்திவிட்டு, இரண்டொரு கணங்களுக்கு முன் விரைந்து சென்றான்!” என அவர் சொல்லியதைக் கேட்டார்.2 இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் ரெட்ரூத் நகர் அருகேயுள்ள இல்லோகன் என்னும் சிற்றூரைச் சேர்ந்த ரிச்சேர்ட் டிரெவிதிக்குத் தாம் உருவாக்கிய நகரும் நீராவி எஞ்சினில் 1801 டிசம்பர் 24 அன்று சிலரை ஏற்றிச் சென்றபோது ‘புஸ், புஸ்’ என அதிலிருந்து பேரோசை எழுந்ததால் அதை ‘இரைக்கும் பிசாசு’ என அழைத்தனர்.3

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!