வரலாற்றின் மௌனத்தில் ஒளிரும் சொற்கள்- சந்துரு மாயவன்

(ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுகளை முன்வைத்து)

புதிய தலைமுறையைச் சேர்ந்த

நீக்ரோ கலைஞர்களான நாங்கள்,

எங்களது தனிப்பட்ட

கறுப்புத் தோல் போர்த்திய பண்புகளை

எவ்வித பயமோ, வெட்கமோ இன்றி

வெளிப்படுத்த முனைகிறோம்

நாங்கள்

எங்களுக்குத் தெரிந்த முறையில்

எங்களுக்கான

நாளைய கோயில்களைக் கட்டுகிறோம்.

– லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

வரலாறு மாறுதலுக்குட்பட்டது :

சமூக நிகழ்வுகள் அனைத்துமே வரலாறாக முன்மொழியப்படுவதில்லை. மாறாக, எது ஆவணப்படுத்தப்படுகிறதோ அல்லது திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படுகிறதோ (Narrative setup) அதுவே வரலாறாக நிலைப்பேறாக்கம் (Standardization) செய்யப்படுகிறது. வரலாற்று வரைவுகள் (Histrography) என்பது கடந்த கால நிகழ்வாக மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, அது நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் அதன் இயங்கியல் போக்கில் வினையாற்றி மாறுதலுக்குட்படக்கூடியது. அதனால்தான் வரலாற்றை மிகக் கவனமாக நுணுகி வாசித்தறிய வேண்டிய தேவை உள்ளது.

இன்றளவும் பாட்டு, தொகைப் பனுவல்கள் புனைவிலக்கியமாக வாசிக்கப்படுவதைவிட மெய்யான வரலாறாகவே வாசிக்கப்படுவதைக் காண முடிகிறது. (யாதும் ஊராய் யாவரும் கேளிருமாகவே ஒட்டுமொத்தச் சமூகமும் அன்றைக்கு இருந்தது என்பதாக விதந்தோதப்படுவதைச் சான்றாகக் கொள்ளலாம்). ‘இலக்கியம் என்பது வாழ்வியலைப் பிரதிபலிக்கும்’ என்பது பின்நவீனத்துவம் நமக்கு வழங்குகிற பாடம். ஆனால், அதுவே முற்றுமுழுதான வரலாறாகாது. இங்கு வரலாறு என்பது இருமைகளின் புற அழுத்தத்திலிருந்தே கட்டமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

வரலாறும் அதிகாரமும்

அதாவது, ஆட்சி அதிகாரம் சார்ந்து இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் என்கிற இருமையில் வரலாற்று வரைவுகள் உருவாக்கப்பட்டன. இங்கு பாட்டு, தொகை, வள்ளுவம், சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வழியாகவும் கரிகாலன், மனுநீதிச் சோழன், இராஜராஜன் போன்ற அரசர்கள் வழியாகவும் வரலாற்றைக் கட்டமைத்தனர். (இவ்வாறு திமுக கட்டமைத்த அரசியல் கருத்தாடல்களும் ஒருவகையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் துணைபுரிந்தன என்பதை நினைவிற்கொள்ளலாம்.) ஆக, அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் செயல்பாட்டிற்குக் கடந்தகால வரலாற்று வரைவுகள் துணைபுரிகின்றன. ஆனால், பொதுவான வரலாறு என்பது தலித்துகளை ஒடுக்குவதற்கும் ‘வரலாற்றில் இடமில்லாதவர்கள்’ போன்றதொரு தோற்றப்பாட்டிற்கும் இடமளிக்கிறது. எனவேதான் தலித் வரலாறெழுதியல் என்பது முதன்மையானதாகிறது. அந்த வகையில் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பங்கு அளப்பரியது.

ஒரு வரலாறெழுதியலாளரின் (Histographers) பணி என்பது வரலாற்று முறையில் ஒரு சமூகம் (மக்கள் வாழ்வியலின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியது) உருப்பெற்று வளர்வதைப் புரிந்துகொள்ள முயல்வதே. சமூக வரலாற்றை எழுதுகிற ஒரு வரலாற்றாசிரியர் தனது நிகழ்காலச் சூழலால் பாதிக்கப்படுகிறார். இதனால் நெட்டித்தள்ளப்படும் அவர், அதன் இருவழிப்போக்கான ‘‘நிகழ்காலத் தேவைகள் கடந்த காலத்தில் நோக்கப்படுவதும், கடந்த காலம் குறித்த சித்திரம் நிகழ்காலத்தின் மீது பதியப்படுவதுமான’’ (ரொமிலா தாப்பர்) நோக்கில் நிகழ்காலத் தேவையை அவதானித்தே கடந்தகால தலித் வரலாற்றை வரைவு (Draft) செய்கிறார். அவ்வாறு வரையப்படும் தலித் வரலாறெழுதியலை அறியும் முகமாக அதன் இயங்கியல் போக்கு எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!