வரிசையாக
ஒருவர் பின் ஒருவராக
தூக்க மாத்திரை
கயிறு
தீப்பெட்டி
சாவதற்கு முடிவெடுத்தவர்கள்
கையிலிருக்கும் எமகோல்கள் இவை
தூக்க மாத்திரை
நித்திரையில் உயிர் பறிக்கும்
கயிறு உத்திரத்தில்
நா தள்ள உயிர் எடுக்கும்
நெருப்பு தேகம் எரித்து
நாற்றநெடியோடு சாம்பலாக்கும்
தேர்ந்தெடுங்கள் உங்களுக்கான
எமகோல்களை என்றபடி
கடவுள்
குழம்பியபடி
மூன்றையும் ஒரு சேரக்
கடவுளுக்கு வழங்கினார்கள்
கடவுளும் குழப்பத்தில்
மரணம் கடவுளையும்
தேர்ந்தெடுக்கவிடவில்லை
குவளை நிறையக் கிடக்கும்
மரணங்களில் என்றொரு கணம்
கிட்டலாம்
எல்லா ஆன்மாவிற்கான
அந்த ஒரு சிஃப்
![](https://theneelam.com/wp-content/uploads/2022/06/கவி-கோ-பிரியதர்ஷினி-1155x770.jpg)
சிஃப் – கவி.கோ.பிரியதர்ஷினி
ஓவியம்: அமிர்தலிங்கம்