சாகசக்காரன் பாண்டியனும் பிற கதைமாந்தர்களும் – ந.முருகேசபாண்டியன்

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும்

யதார்த்த வாழ்க்கையில் யாரோ ஒருவர் நடந்து முடிந்த சம்பவத்தைச் சொல்கிறபோது , கதையுடன் கதைமாந்தர்களும் உருவாகின்றனர். கதைமாந்தர்களுடன் நினைவுகளின் வழியாக வாசகனுடைய உரையாடல் தொடங்குகிறது. கதையின் மீதான பேச்சுக்கள் கதைமாந்தரை முன்வைத்து விரிகின்றன. கதையைக் கேட்பவரின் நினைவுகளில் கதைமாந்தர் உயிரோட்டத்துடன் வாழ்கிறார். எந்தவொரு கதைக்கும் மையப்பொருள் முக்கியம் என்றாலும், கதையைத் தொடங்கி நடத்திச் செல்லவும் முடித்திடவும் கதைசொல்லிக்கு மனிதர்கள் தேவைப்படுகின்றனர். நாவலை வாசிக்கும்போது கதையாடலில் முதன்மையாக இடம்பெறுகிற கதாபாத்திரங்களும் வாசிப்பிற்குப் பின்னர் மனதில் தங்கியிருக்கிற பாத்திரங்களின் பெயர்களும் கவனத்திற்குரியன.

ஒவ்வொரு கதைக்குப் பின்னரும் எளிய அல்லது மாபெரும் மனிதர்கள் இருக்கின்றனர். தொன்மக் கதையாடலில் பிரதிகளின் வழியாகக் கதைமாந்தர்கள் காலந்தோறும் தொடர்ந்து பயணிக்கின்றனர். வரலாற்று நாவல்களில் இடம்பெறும் அதியற்புத நாயகர்கள் பிரதியிலிருந்து வெளியேறி நடப்பு அரசியலில் கலக்கின்றனர். கதாசிரியரின் வாழ்க்கை அனுபவம் அல்லது புனைவு சார்ந்து படைப்பில் உருவாக்கப்படும் கதைமாந்தர்கள், கதையின் வழியாக முடிவற்ற கேள்விகளை எழுப்புகின்றனர். வயது, தோற்றம், நடையுடை பாவனை , பார்வை எனப் புறத்திலும் பண்பு , பேச்சு, சிந்தனை என அகத்திலும் நாவலாசிரியரால் சித்திரிக்கப்படும் மொழி, வாசிப்பில் கதைமாந்தர் பிம்பத்தைப் புனைகிறது.

தமிழில் கதையாடலுக்கு அழுத்தம் தந்திடப் பெரிதும் கதைமாந்தர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. நா.பார்த்தசாரதி படைத்த குறிக்கோளுடன் செயல்படுகிற அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்கள், குறிஞ்சி மலர் நாவலில் இருந்து வெளியேறி , அறுபதுகளில் தமிழர்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருந்தது தற்செயலானது அல்ல. வரலாற்றில் தனிநபர் பாத்திரம் ஆளுமையான நிலையில், நவீன இலக்கியப் படைப்புகளில் கதைமாந்தர்கள், எதிர்மறைப் பண்புகள் மூலமாகவும் இருப்பை உறுதி செய்கின்றனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!