ஈழத்துத் தலித் இலக்கிய முன்னோடிகள்

தேர்வும் தொகுப்பும்: பொய்யாமொழி முருகன்

கே.டேனியல்

 

மிழ் தலித் இலக்கியத்திற்கு முன்னோடியாக வெளிப்பட்டவை ஈழத்துத் தலித் படைப்பாளிகளின் படைப்புகளாகும். ஈழத்துத் தலித் இலக்கியத்தின் முன்னோடியாக கே.டானியலைக் குறிப்பிடலாம். இலங்கையின் தீண்டாமைக் கொடுமைகளை எதார்த்தவாத எழுத்துகளின் மூலம் வெளிப்படுத்தியவர்.

டேனியல் சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். மாவோயிசக் கொள்கைகளை ஏற்றுச் செயல்பட்ட இயக்க முன்னோடி. 15.04.1927ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள ஆணைக் கோட்டையில் கிறகொரி – மரியாள் தம்பதியருக்குப் பிறந்தார்.

சுதந்திரன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘அமரகாவியம்‘ என்ற கதையை எழுதி முதற் பரிசைப் பெற்றதன் மூலம் தமிழ்ப் படைப்புலகில் அறிமுகமானார். தன்னைப் பற்றியும் தனது எழுத்தைப் பற்றியும் தன் மீது சாதிய இலக்கியம் படைப்பவர் என்ற விமர்சனத்திற்குப் பதிலிறுக்கும் விதமாக ‘என் கதை‘ என்ற நூலில் குறிப்பிடும் போது

“எனது குடும்பத்தொழில் சீலை வெளுப்பு. இதைச் சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான். அதை விடவும் தமிழர்களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதானால் ‘கட்டாடி’ என்று சுருக்கிவிடலாம். கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின்மையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை வாசகர்களை அறிய வைப்பதற்காகவும், இற்றாள் நெடுகச் சாதியை எழுதுவது ஏன் இப்படிச் செய்யுது என்று என் மீது கேலிக் கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்று தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்”

என்று எழுதுகிறார்.

பஞ்சமர்’ (1978), ‘கோவிந்தன்’ (1983), ‘அடிமைகள்’, ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’ (1984), ‘தண்ணீர்’, ‘நெடுந்தூரம்’, ‘கானல்’ (1986), ‘பஞ்ச கோணங்கள்’ முதலிய நாவல்களையும் ‘மனங்கள் தானாக மாறுவதில்லை’, ‘பூ மரங்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி’, ‘மையக் குறி’, ‘தெணியனின் பிஞ்சப் பழம்’, ‘சொக்கட்டான்’, ‘இருளின் கதிர்கள்’, ‘சாநிழல்’ முதலிய குறுநாவல்களையும் எழுதியுள்ளார். மேலும், ‘அமர காவியம்’, ‘டானியல் சிறுகதைகள்’, ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. பேரா.அ.மார்க்ஸ் தனக்கும் மற்றவர்களுக்கும் டானியல் எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘கே.டானியல் கடிதங்கள்‘ எனும் பெயரில் வெளியிட்டுள்ளார்.

கே.டானியலின் எழுத்துகள் சமூகத்தின் அடிநிலையிலிருந்து மேல் நோக்கிப் பார்க்கக் கூடியவை. எனவே மேலே இருந்தவர்களிடம் மற்றவர்கள் காணாதவற்றையும் கண்டு தமது இலக்கியங்களில் ஒளிவு மறைவின்றிச் சொல்லியவர். அதனாலே தூற்றுதலுக்கு உள்ளானவர். யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதிய ஏற்றத் தாழ்வுகளை, சாதியின் வழியாக வருகின்ற தீண்டாமையை, அது ஏற்படுத்தும் மனிதாயச் சிதைவுகளால் பாதிக்கப்பட்டவர். அதனைப் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்து, அவர்கள் பார்வையில் படைப்பாக்கியவர் டேனியல். அத்தோடு இல்லாமல் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!