செல்வசங்கரன் கவிதைகள்

படாடோபம்

கல் இதை எப்படிச் செய்கிறதென்றே தெரியவில்லை
அது தொட்டவுடன்
எல்லாம் தங்களது மூடியைக் கழட்டிக் கொள்கின்றன
ஆணுறுப்பை நீவியது போல
உரித்துக் காட்டுகிறது எல்லாவற்றையும்
பொருட்களாகவே வாழ்ந்துவருகிறது பகல்
அதன் ஜாலங்களையெல்லாம்
ஒரே மூச்சில் அள்ளுகின்ற கைகள் ஒன்று
இங்கு உண்டா
என்னால்
கற்பனை செய்யவே முடியவில்லை அக்கைகளை
அதன் படாடோபம் எப்படியும் இருக்கட்டும்
வெளியேறத் தெரியாமல்
திரும்பவும் முகத்திற்குள்ளேயே
நீந்திக்கொண்டிருக்கிற சங்கடங்களைக்
கூச்ச நாச்சமில்லாமல் காட்டுகின்ற
அதன் தெள்ளத் தெளிவு
நிச்சயம் அயோக்கியத்தனமானது.

m

கண்றாவி

ங்களுக்குள்ளே ஒரு சண்டை
அதை மீறி
என்னை மொபைலில் அழைத்துவிட்டார்
அதை மீறி
மொபைலை நான் எடுத்துவிட்டேன்
சண்டையை
இந்தப் பக்கம் கூடி கடிக்க ஆரம்பித்தார்
அந்தப் பக்கம் கூடி நான் கடித்துவந்தேன்
சண்டை இப்பொழுது அஷ்ட கோணத்தில்
நெளிந்து நின்றது
மொபைலை நான் வைத்த பிறகு
கண்றாவியாக ஒரு சிரிப்பு சிரிக்கலாமென்றால்
அந்தச் சமயத்தில்
அவர் அவ்வாறு சிரித்துக்கொண்டிருப்பார் போல
எனக்கு அது வரவேயில்லை
கண்றாவிக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!