ரசனையாளர் அம்பேத்கர்

- ரா. அருள்

பாபாசாகேப் அம்பேத்கர் என்ற மாபெரும் ஆளுமையின் வாழ்க்கையில் இலக்கியத்திற்கான இடம் என்ன என்பதை கண்ணுற்றால், அதற்கான பதில் எதுவும் இல்லை என்றுதான் தோன்றும் ஆனால் அவர் எழுதிய சில முன்னுரைகளை வாசித்தால் அப்படி சொல்ல முடியாது. அம்பேத்கர் படைப்புகளில் அவரைப் பற்றிய சில உருவச்சித்திரங்கள் கிடைக்கும். சில படைப்புகளில் அவர் பொருளியல் மேதையாகக் காட்சியளிப்பார் சில படைப்புகளில் மானுடவியல் ஆய்வாளராக தோற்றமளிப்பார். அவருடய படைப்புகள் ஒவ்வொன்றும் அவருடைய ஆளுமையின் வெவ்வேறு முகங்களைப் பிரதிபலிக்கும். இத்தகைய ஆளுமைத்திறன்களின் ஆதாரமாக இருப்பது அம்பேத்கர் என்ற எளிமையான மனிதரே. பொருளியல் அறிஞர், சிந்தனையாளர், வரலாற்றாய்வாளர் போன்ற உருவச் சித்திரங்கள் அம்பேத்கரைத் துள்ளியமாகப் பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியாது. அம்பேத்கர் தன்னை ஒரு எளிய மனிதனாக வெளிப்படுத்திய இடம், தன் புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளில்தான். அவை ஒவ்வொன்றும் ஓர் எளிய மனிதனின் தேர்ந்த இலக்கியப் படைப்புகள் என்று கூறலாம். புத்தகங்களில் சொல்ல முடியாத வலிகளையும் ஏமாற்றங்களையும் முன்னுரைகளாக எழுதிவிட்டார் போலும். அத்தகைய முன்னுரைகள் வழியே அவருடைய வாழ்க்கையில் இலக்கியத்திற்கான இடம் என்ன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னுடைய புத்தக சேமிப்பில் சில இலக்கியப் படைப்புகளும் அவரிடம் இருந்திருக்கின்றன என்பதை அவரது காரியதரிசியான நானக் சந்த் ரட்டு எழுதிய ‘டுவைவடந முழெறn குயஉவள ழக னுச. யுஅடிநனமயச’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

அம்பேத்கரின் சில முன்னுரைகள் அவருடைய இலக்கிய வாசிப்பைப் பற்றி மட்டும் சொல்வதில்லை. இலக்கியம் என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும், குறிப்பிட்ட எழுத்து முறையை எவ்வாறு இலக்கியமாக உருமாற்ற முடியும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை அவருக்கு இருந்திருக்கிறது என்பதையும் புலப்படுத்துகின்றன. இலக்கிய வகைகளில் புனைவெழுத்தான நாவல் வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது. நாவலுக்கு மிக நெருங்கிய எழுத்து முறை வரலாற்றெழுத்து ஆகும். தன்னுடைய ‘Who were Sudras’ (Vol. 7) என்ற புத்தகத்தின் முன்னுரையிலும் ‘On Hero and Hero Worship’ (Vol1) என்ற கட்டுரையிலும் வரலாறு எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதைப்பற்றி பேசுகிறார். வரலாற்றை வெறும் வாழ்க்கையைப் பற்றிய விசாரணையாகவோ, சம்பவங்களின் பதிவாகவோ மட்டும் பார்க்காமல், வரலாற்றைக் கட்டமைக்கப்பட்ட பிரதியாக அம்பேத்கர் பார்க்கிறார். கார்லைல் என்ற வரலாற்றாசிரியரை முற்றும் வாசித்து உணர்ந்தவருடைய பார்வை இது. தொடக்கக் காலத்தில் புனித அகஸ்டின் என்பவர் ‘வரலாறு இறைத்திட்டத்தின் விவரிப்பு’ என்றார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!